இன்னும் பிங்கர் ஏரியாவில் முகாம் ... சீனாவை நம்பலாமா?
டெல்லி: எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதியிலும், லடாக்கின் கிழக்கில் பிபி14, பிபி15, பிபி17 (ஹாட் ஸ்ப்ரிங்க்ஸ்) ஆகிய இடங்களில் சீனா ராணுவ துருப்புகளை வாபஸ் பெற்றுக் கொண்டது. ஆனால், பிங்கர் ஏரியா பகுதியில் இன்னும் சீன வீரர்கள் இருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்திய, சீன எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்று அழைக்கப்படும் பகுதியில் இருந்து நேற்று முழுவதுமாக சீன ராணுவத்தினர் வெளியேறினர். இந்தப் பகுதியில் இருந்து 2 கி. மீட்டர் தொலைவிற்கு உள் வாங்கிச் சென்றதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் பிங்கர் ஏரியா பகுதியில் இன்னும் சீன ராணுவ வீரர்கள் சிறிதளவில் முகாமிட்டுள்ளனர். இருநாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு இடமாக கருதப்படும் பகுதியில் இருநாட்டு ராணுவத்தினரும் தினமும் ரோந்து செல்வது வழக்கம். அவ்வாறு ரோந்து செல்லும் பகுதியான பிபி14, பிபி15, பிபி17 பகுதியில் இருந்து இருநாட்டு ராணுவத்தினரும் சுமார் 2 கி.மீட்டர் தொலைவிற்கு தங்களது பகுதிக்குள் வாபஸ் பெற்றுள்ளனர். சீனா தனது முகாம்கள் அனைத்தையும் இங்கு இருந்து காலி செய்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு பேச்சுவார்த்தையின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 15ஆம் தேதி இந்திய, சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு இருந்தனர். இதையடுத்து இருநாடுகளுக்கும் இடையே எல்லையில் பதட்டம் ஏற்பட்டு, இருதரப்பிலும் படை அதிகரிக்கத் துவங்கினர்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இடையே தொலைபேசியில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் எல்லையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. இருநாட்டுப் படைகளும் சர்ச்சைக்குரிய இடங்களில் இருந்து வாபஸ் பெற்றன.
தன்னுடைய கூடாரங்களை சீனா காலி செய்து கொண்டு சென்று விட்டாலும், கால்வான் ஆற்றுப் பகுதியில் சீனாவின் கனரக வாகனங்கள் இன்னும் முகாமிட்டு உள்ளன. விமானங்கள் மற்றும் ரோந்து மூலமும் சீனாவின் நடவடிக்கைகளை இந்தியா தீவிரமாக கண்காணித்து வருகிறது.
-
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications