இந்திய எல்லையில் சீனா அட்டகாசம்.. அதி நவீன ஆயுதங்களுடன், 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு.. ஷாக்
டெல்லி: பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும்கூட, இந்திய எல்லையிலிருந்து சீன ராணுவம் பின்வாங்கவில்லை. இன்னமும் சுமார் 40,000 சீன ராணுவ வீரர்கள் நவீன ஆயுதங்களுடன் எல்லையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லடாக் பிராந்தியத்தின் கிழக்குப்பகுதியில் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே, சீன ராணுவம் ஆக்கிரமிப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இவ்வாறு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் செய்ய இறங்கிய போது, அதை தடுத்த இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
Recommended Video
இந்த மோதலுக்கு பிறகு இப்பிரச்சினை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில்தான், இரு நாட்டு, ராணுவ கமாண்டர்கள் அளவில் இதுவரை நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.

பேச்சுவார்த்தை
கடந்த 14ஆம் தேதி நான்காவது கட்ட பேச்சுவார்த்தை நடந்த பிறகு, அடுத்தகட்ட முன்னெடுப்புகள் எதுவும் இரு நாடுகளில் இருந்தும் இன்னும் எடுக்கப்படவில்லை. பேச்சுவார்த்தையில் வெற்றி கிடைத்ததால் ஒரு சில பகுதிகளில் இருந்து சீன ராணுவம் பின் வாங்கியதாக தகவல்கள் தெரிவித்தன. குறிப்பாக கல்வான் பகுதி, ஹார்ட் ஸ்பிரிங்ஸ் பகுதி, பேங்காக் ஏரியை ஒட்டிய ஃபிங்கர்ஸ் பிராந்தியத்தின் ஒருசில பகுதிகளில், சீன ராணுவம் படைகளை விலக்கிக் கொண்டதாக தகவல் வெளியானது.

சீனா தொல்லை
அதேநேரம் டெப்சாங் சமவெளிப் பகுதியில் இந்திய ராணுவத்தை ரோந்து செல்ல விடாமல் சீனா தடுத்து தொல்லை கொடுத்து வருகிறது. ஃபிங்கர் 5 பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி சீன ராணுவம் பின்வாங்கவில்லை. இந்த பகுதியில் ராணுவ நிலை அமைப்பதற்கு சீனா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவேதான் பின் வாங்க மறுப்பு தெரிவித்து வருகிறதாம்.

40,000 சீன ராணுவ வீரர்கள்
செய்தி நிறுவனமான ஏஎன்ஐ ராணுவ வட்டார தகவல்களை மேற்கோள்காட்டி ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது: சீன ராணுவம் எல்லையில் இருந்து பின் வாங்குவதற்கு தயாராக இல்லை. எல்லைப் பகுதிகளில் சுமார் 40,000 சீன ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் வான்வெளி தாக்குதல் தடுப்பு கருவிகள், நீண்ட தூர இலக்குகளை குறிவைத்து தாக்கக்கூடிய பீரங்கிகள் போன்ற அதிநவீன ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

பின்வாங்காத சீனா
கிழக்கு வடக்கு பகுதியில் சீன ராணுவம் முழுமையாக பின்வாங்கவில்லை. இந்தியாவுக்கு அவர்கள் கொடுத்த வாக்குறுதியை மதிக்கவில்லை. ராணுவ உயர்மட்ட அளவிலான அழுத்தம் இந்த விஷயத்தில் தேவைப்படுகிறது. தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல் சில வாரங்களுக்கு முன்பாக சீனாவுடன் நடத்தியது போன்ற பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட தேவையுள்ளது. அல்லது சீன ராணுவம் பின்வாங்குவதற்கு எந்த அறிகுறியும் இல்லை என்று ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாக, அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications