இந்தியா-சீனா இடையே தொடரும் உரசல்.. 6ம் தேதி உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை.. பலத்த எதிர்பார்ப்பு
டெல்லி: கிழக்கு லடாக் அருகே இரு நாட்டு ராணுவ வீரர்களின் எல்லை மோதலுக்கு இடையே, ஜூன் 6 சனிக்கிழமை, இந்தியாவும் சீனாவும் லடாக்கில் ராணுவ அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளன.
இந்த பேச்சுவார்த்தைகள் சுஷுல்-மோல்டோவில் உள்ள இந்திய பார்டர் பாயிண்ட் பகுதியில் நடைபெறும். இந்திய தரப்புக்கு 14 கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமை தாங்குவார்.

பிராந்திய ராணுவத் தளபதிகளின் பல பேச்சுவார்த்தைகள் இதுவரை எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பதற்றம் அதிகரித்தபடியே உள்ளதால், அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை, ராணுவத் தரப்பு முன்னெடுத்து வருகிறது.
1962 இல் ஒரு சிறு யுத்தத்தை இந்தியாவும், சீனாவும் நடத்தின. அதன்பிறகு ஒரு துப்பாக்கி குண்டும், இரு தரப்பிலிருந்தும், புறப்பட்டது கிடையாது. ஆனால், டோக்லாமில், இப்போது லடாக்கில் ஏற்பட்டதை போன்ற நேரடி பூசல் 2017ல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் அந்த பிரச்சினை நீடித்தது. பின்னர் பரஸ்பரம் சரியானது.
லடாக் மற்றும் சிக்கிமில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அல்லது எல்.ஐ.சி வழியாக நடத்தப்படும், வழக்கமான ரோந்துக்கு சீன ராணுவம் தடையாக இருப்பதாக இந்திய ராணுவம் குற்றம்சாட்டியது. இதன்பிறகுதான், இரு படைகளுக்கிடையில் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை பதற்றம் குறித்துதான், பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் செவ்வாய்க்கிழமை இரவு தொலைபேசியில் நடத்திய ஆலோசனையில் முக்கிய இடம் பிடித்தது என்று தகவல் வெளியாகியது. இந்த நிலையில், நடைபெற உள்ள பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்தியா-சீனா இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாகவும் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications