முதல்முறையாக ஒன்று கூடிய இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ்... என்ன பேசினார்கள்
டெல்லி: சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் முதல் முறையாக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக பார்க்கப்படுகிறது
இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஆகியா நாடுகள் முதல் முறையாக பேச்சுவார்த்தை நடத்தின. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது. சீனா இந்திய எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டு வரும் இந்த நேரத்தில் பேச்சுவார்த்தை நடந்திருப்பதால் முக்கியமான பேச்சுவார்த்தையாக பார்க்கப்படுகிறது,

ஆன்லைன் வாயிலாக நடந்த இந்த பேச்சுவார்த்தையில் இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, பிரெஞ்சு ஐரோப்பா மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் பொதுச்செயலாளர் பிரானோயிஸ் டெலாட்ரே மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை செயலாளர் பிரான்சஸ் ஆடம்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சம் வெளியிட்ட அறிக்கையில், "இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்த பேச்சுவார்த்தையில் முக்கியத்துவம் தரப்பட்டது. இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளும் ஒருவருக்கொருவர் வலுவான இருதரப்பு உறவுகளை உருவாக்குவதையும், அமைதியான, பாதுகாப்பான, வளமான மற்றும் விதிகளை அடிப்படையாகக் கொண்ட இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உறுதி செய்வதற்கும், மற்றும் அதற்குரிய பலங்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் இந்த ஆக்கப்பூர்வமான கூட்டம் நடைபெற்றது.
ஒவ்வொரு வருடம் இந்த உரையாடலை நடத்த மூன்று நாடுகளும ஒப்புக் கொண்டன. . இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதார மற்றும் யுக்தி சார்ந்த சவால்கள் மற்றும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து மூன்று தரப்பினரும் விவாதித்தனர், குறிப்பாக கொரோனா தொற்றுநோய் மற்றும் உள்நாட்டு நெருக்கடியை சமாளிப்பது தொடர்பாக பேச்சு நடந்தது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications