இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,827 பேருக்கு கொரோனா.. மகாராஷ்டிராவில் 7603 பேர் பாதிப்பு!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,827 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் கொஞ்சம் குறைய தொடங்கி உள்ளது. மூன்றாம் அலை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்ற நிலை உள்ளது. ஆனாலும் தினசரி கேஸ்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது.
கேரளா மகாராஷ்டிராவில் மட்டும் இந்தியாவில் தினசரி கேஸ்கள் அதிகமாக பதிவாகி வருகிறது. இந்தியாவின் மொத்த புதிய கேஸ்களில் 80% வரை இரண்டு மாநிலங்களில் இருந்துதான் பதிவாகி வருகிறது.

எத்தனை
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,827 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 546 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் 30,904,734 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 409,338 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 30,056,130 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

இந்தியா
இந்தியாவில் தற்போது 439,266 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். மகாராஷ்டிராவில் 61,65,402 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 7603 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,08,343 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 59,27,756 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 1,26,024 பேர் பலியாகி உள்ளனர்.

கேரளா
கேரளாவில் 30,73,134 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 7798 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,11,100 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 29,46,870 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 14686 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் 25,21,438 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 2652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 31,819 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 24,56,165 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 33,454 பேர் பலியாகி உள்ளனர்.

கர்நாடகா
கர்நாடகாவில் 28,72,684 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 1386 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34,858 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 28,01,907 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 39896 பேர் பலியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications