பெண் பைலட்கள்.. இந்தியா இப்படி ஒரு சாதனை வச்சிருக்கு.. பெருமையாக சொன்ன மத்திய அமைச்சர்
டெல்லி: இந்திய பைலட்டுகளில் 15 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர். இந்தியாவை ஒப்பிடும்போது பிற உலக நாடுகளில் உள்ள பெண் பைலட்டுகளின் எண்ணிக்கை வெறும் 5 சதவீதம் தான் என மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பெருமிதமாக கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31 முதில் பிப்ரவரி 11 வரை நடந்தது. தற்போது 2வது அமர்வு நடைபெற்று வருகிறது. மார்ச் 14ல் துவங்கிய இந்த 2வது அமர்வு ஏப்ரல் 8 வரை நடைபெற்று வருகிறது.
இன்று விமான போக்குவரத்து துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற்றது. இதுதொடர்பாக லோக்சபாவில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பேசினார்

220 புதிய விமான நிலையங்கள்
அப்போது அவர் விமான போக்குவரத்து துறையின் செயல்பாடு, திட்டங்கள் குறித்து விளக்கினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: புதிதாக 33 உள்நாட்டு சரக்கு முனையம் அமைக்கவும், பைலட் பயிற்சிக்காக 15 பயிற்சி பள்ளிகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ட்ரோன் பிரிவில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கவும் முடிவு எடுக்கப்பட உள்ளது. 2025 ஆண்டுக்குள் புதிதாக 220 விமான நிலையங்கள் அமைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

உக்ரைனில் மாணவர்கள் மீட்பு
கடந்த 7 நாள் நிலவரப்படி தினசரி 3.82 லட்சம் பேர் விமான போக்குவரத்தை மேற்கொண்டுள்ளனர். 2018-19 ஆண்டில் 34.5 கோடி பேர் விமான பயணம் செய்த நிலையில் இதை 2023-24ல் 40 கோடியாக உயர்த்த ஊக்குவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போரில் இந்தியர்கள் 90 விமானங்களில் மீட்கப்பட்டனர். இந்திய விமானப்படையில் 14 விமானங்கள் பயன்படுத்தப்பட்டது. இதனால் விமானப்படைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

15 சதவீதம் பெண் பைலட்டுகள்
இந்தியாவில் உள்ள பைலட்டுகளில் 15 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள். உலகில் உள்ள பிற நாடுகளில் உள்ள பெண் பைலட்டுகளின் எண்ணிக்கை வெறும் 5 சதவீதமாக தான் உள்ளது. இது பெண்களுக்கான அதிகாரமளித்தலில் இந்தியா முன்னோடியாக இருப்பதற்கு உதாரணமாகும். இந்தியாவில் சிறப்பு தொழில்நுட்ப உதவியுடன் பைலட் லைசென்ஸ் நடைமுறை எளிதாக்கப்படும்.

விமானத்துறையின் முக்கியத்துவம்
கடந்த 20 முதல் 25 ஆண்டுகளில் விமான துறையில் ஏராளமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு முன்பு பெரிய நகரங்களில் மட்டுமே விமான நிலையங்கள் இருந்தன. தற்போது இந்நிலை முற்றிலும் மாறியுள்ளது. இது இந்திய பொருளாதாரத்தில் விமானத்துறையின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது'' என்றார்.
-
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications