பாகிஸ்தான் அப்பாவிகளை தாக்குகிறது.. வரம்பை மீறமாட்டோம்! ஆனால் பதிலடி கொடுப்போம்! ஜெய்சங்கர் வார்னிங்
டெல்லி: "பாகிஸ்தானின் ராணுவ நிலைகளை மட்டுமே இந்தியா தாக்கி வருகிறது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்தியா தகுந்த பதிலடி தரும். இந்தியா வரம்பை மீறாது. நிதானமான, பொறுமையான அணுகுமுறைகளை இந்தியா கையாள்கிறது." என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் தினமும் பாகிஸ்தான் இரவு நேரத்தில் இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் அப்பாவிகளை தாக்கி வருகிறது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. அமெரிக்க வெளியறவுத்துறை மார்கோ ரூபியோ இரு தரப்பிலும் பேசி வருகிறார்.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் மார்கோ ரூபியோ பேசியுள்ளார். அப்போது பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் "இந்தியா தாக்குதல் தொடர்ந்தால் நாங்களும் தொடர்வோம். இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் நிறுத்துவது குறித்து பரிசீலிப்போம். பொறுமையை இழந்ததால்தான் தாக்குதலை தொடங்கினோம்" எனத் தெரிவித்ததாக தகவல் வெளியாகியள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மார்கோ ரூபியோவிடம் பேசுகையில், "இந்தியாவின் அணுகுமுறை எப்போதும் பொறுப்பானது. அது அப்படியே தொடர்கிறது." எனத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், "பாகிஸ்தான் ராணுவம் அப்பாவிகளை தாக்கி வருகிறது. பாகிஸ்தானின் ராணுவ நிலைகளை மட்டுமே இந்தியா தாக்கி வருகிறது: பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்தியா தகுந்த பதிலடி தரும். இந்தியா வரம்பை மீறாது. நிதானமான, பொறுமையான அணுகுமுறைகளை இந்தியா கையாள்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications