சீனாவுக்கு ஆப்பு வைத்த இந்தியா.. டிரம்ப் பாணியில் ஸ்டீல் பொருட்களுக்கு வரியை தீட்டிய மத்திய அரசு
டெல்லி: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் ஸ்டீல்களின் மீது 3 ஆண்டு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. சீனாவில் இருந்து மலிவு விலையில் ஏராளமான ஸ்டீல் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் நிலையில் அதனை குறிவைத்து இந்த வரி விதிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தேர்வு செய்யப்பட்ட ஸ்டீல் பொருட்கள் மீதான வரி அதிகரிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதன்படி ஸ்டீல் பொருட்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு 11-12 சதவீதம் இறக்குமதி வரியை விதித்துள்ளது.

இந்த வரி முதல் ஆண்டில் 12 சதவீதமாகவும் நடைமுறையில் இருக்கும். அதன்பிறகு 2வது ஆண்டில் 11.5 சதவீதமாக குறைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். அதன்பிறகு 3வது ஆண்டில் இன்னும் கூடுதலாக குறைத்து 11 சதவீதம் என்ற அளவில் வரி அமலுக்கு கொண்டு வரப்படும்.
நம் நாட்டை எடுத்து கொண்டால் உலகின் 2வது Crude Steel உற்பத்தியாளராக உள்ளது. ஆனால் சீனாவில் இருந்து வரும் மலிவு விலை ஸ்டீல் இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களின் விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்
இதன் காரணமாக உள்நாட்டு ஸ்டீல் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்படியான சூழலில் தான் சீனாவின் இறக்குமதியை குறைக்கும் வகையில் வெளிநாட்டில் இருந்து வாங்கப்படும் ஸ்டீல் பொருட்கள் மீதான வரியை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஸ்டீல் இறக்குமதிக்கு அதிகப்படியான வரிகளை விதித்தார். இதில் சீனா பாதிக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவுக்கு மாற்று மார்க்கெட்டை சீனா தேடி வந்தது. அமெரிக்காவுக்கு செல்ல முடியாத ஸ்டீல் ஏற்றுமதியை பிற நாடுகளுக்கு அனுப்பி வந்தது. இப்படியான சூழலில் தான் நம் நாடும் சீனாவின் மலிவு விலை ஸ்டீல் வணிகத்தை குறிவைத்து வரிகளை தீட்டி உள்ளது.
முன்னதாக வியட்நாம் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கும் சீனாவில் இருந்து அதிகப்படியான ஸ்டீல் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் வியட்நாம், தென்கொரியா நாடுகளும் சீனாவின் ஸ்டீல் ஏற்றுமதியை குறைக்கும் வகையில் வரியை விதித்தன. இப்படி அடுத்தடுத்து ஒவ்வொரு நாடுகளும் சீனாவின் ஸ்டீல் ஏற்றுமதியை குறிவைத்து வரி விதிப்பதால் அந்த நாட்டுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை












Click it and Unblock the Notifications