எல்லையில் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொண்டால் தக்க பதிலடி கிடைக்கும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
டெல்லி: எல்லையில் ஆக்கிரமிப்பு முயற்சிகளை எந்த நாடு மேற்கொண்டாலும் தக்க பதிலடி கிடைக்கும் என்பதை நமது வீரர்களின் மகத்தான தியாகம் வெளிப்படுத்தி இருக்கிறது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 74-வது சுதந்தி தினத்தை நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். முதலில் இந்தியிலும் பின்னர் ஆங்கிலத்திலும் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

ஜனாதிபதி ராம்நாத் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:
தேசத்தின் விடுதலைக்காக போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களை வணங்குகிறேன். 74வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடப்பாண்டு கொரோன வைரஸ் பாதிப்பால் சுதந்திர தின கொண்டாட்டங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா போர்க்களத்தில் முன்களப் பணியாளர்களாக பணியாற்றிய மருத்துவர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், செவிலியர்கள் அனைவருக்கும் வணக்கங்களை செலுத்துகிறேன்.
மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட பிரிவினைகள் பற்றி எல்லாம் கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் கவலை கொள்ளவில்லை. அனைவரையுமே கொரோனா வைரஸ் பாதித்திருக்கிறது. உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா கொரோனா வைரஸை திறம்பட எதிர்கொண்டிருக்கிறது.
கொரோனா வைரஸ் காலம் நமக்கு பலவித பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது. தகவல் தொழில்நுட்பத்தின் தேவையை கொரோனா காலம் நமக்கு உணர்த்தி இருக்கிறது. எல்லையில் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொண்டால் தக்க பதிலடி கிடைக்கும் என்பதை நமது வீரர்களின் மகத்தான தியாகம் வெளிப்படுத்தி இருக்கிறது.
பிரதமர் மோடியின் கரீப் கல்யாண் திட்டம் கொரோனா லாக்டவுன் காலத்தில் ஏழைகளுக்கு பெரும் உதவியாக இருந்தது. மத்திய அரசு கொரோனாவை கட்டுப்படுத்த உரிய நேரத்தில் சரியான நடவடிக்கை மேற்கொண்டது.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையானது புதிய இந்தியாவை கட்டி எழுப்புவதற்கு உதவும். புதிய கல்வி கொள்கையில் தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தியா தமது தனித்தன்மையை இழக்காமல் உலக பொருளாதாரத்துடன் இணைந்து செயற்பட வேண்டும். தற்சார்பு என்பது உலக பொருளாதாரத்தில் இருந்து துண்டித்துக் கொள்வதும் இல்லை. இவ்வாறு ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
-
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications