இன்னும் 5 நாட்கள்தான்.. இந்தியா இன்னொரு தாக்குதலுக்கு திட்டமிடுகிறது.. பாக். பரபரப்பு குற்றச்சாட்டு!
Recommended Video

டெல்லி: இந்திய விமானப்படை பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டி இருக்கிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன் இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் என்று பாலக்கோடு உட்பட நான்கு இடங்களில் தாக்குதல் நடத்தியது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் 3 அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்தது. அதன்பின் பாகிஸ்தான் விமானப்படை இந்திய எல்லைக்குள் புகுந்து தாக்க முயன்றது. இதனால் பெரிய அளவில் போர் பதற்றம் நிலவி வந்தது.

போர் இல்லை
பாகிஸ்தானில் பிடிபட்ட இந்திய விமானப்படை அதிகாரி அபிநந்தனின் விடுதலை தொடர்ந்து இந்த போர் பதற்றம் மொத்தமாக தணிந்தது.இந்த தாக்குதல்கள் குறித்தும் இப்போதும் நிறைய கேள்விகளும், மர்மங்களும் நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்ச
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது குரேஷி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நேரடியாக புகார் அளித்து இருக்கிறார். இந்தியா எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும். எங்கள் உளவுத்துறை தகவல்கள் அப்படித்தான் தெரிவிக்கிறது.

எப்போது தாக்குதல்
பெரும்பாலும் ஏப்ரல் 16-20க்குள் இந்த தாக்குதல் நடக்க வாய்ப்பு இருக்கிறது. எங்களுக்கு இதுகுறித்து உறுதியான தகவல்கள் வந்தது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

தேர்தல் நேரம்
இந்தியாவில் ஏப்ரல் 11ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு தாக்குதல் நடக்குமா என்பது குறித்து பலரும் சந்தேகம் எழுப்பி இருக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டு மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications