பெருந்தன்மை கொண்டவர் ராகுல்.. ராகுல் போன்றோர் தலைவராக வேண்டும்.. பாஜக எம்எல்ஏ பகீர்
டெல்லி: ராகுல் காந்தியின் சிம்ப்ளிசிட்டி, பெருந்தன்மை ஆகியவற்றை கொண்டதால் அவர் அனைவராலும் விரும்பப்படுகிறார் என பாஜக எம்எல்ஏ பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் மூக்கில் டியூப் மூலம் உணவு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த டியூப்புடன் அவர் மக்கள் நல திட்டங்களை பார்வையிட்ட புகைப்படங்கள் வைரலானது.

வாழ்த்து
இந்த நிலையில் கோவா சென்ற ராகுல் காந்தி, சட்டசபைக்கு சென்று அங்கிருந்த முதல்வர் மனோகர் பாரிக்கரை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும் அவர் விரைவில் நலம் பெற வாழ்த்துகளையும் தெரிவித்துவிட்டு சென்றார்.

படுக்கை அறை
இதனால் கோவா சட்டசபை துணை சபாநாயகரும் பாஜக எம்எல்ஏவுமான மைக்கேல் லோபோ பிரமித்து போய்விட்டார். நேற்று வரை ரபேல் தொடர்பான ஆவணங்கள் பாரிக்கரின் படுக்கை அறையில் இருப்பதாக குற்றம்சாட்டியவர் ராகுல் காந்தி.

சிம்ப்ளிசிட்டி
இன்று மனோகர் பாரிக்கரின் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அறிந்து அவரை நலம் விசாரித்துள்ளார். இதன் மூலம் அவரது சிம்ப்ளிசிட்டி மற்றும் பெருந்தன்மை வெளிப்படுகிறது.

கோவாவுக்கு தேவை
ராகுலின் இந்த குணங்களை இந்தியர்கள் விரும்புகிறார்கள். அவர் இங்கு வந்து பாரிக்கரை நலம் விசாரித்ததில் மகிழ்ச்சி. இதுபோன்ற தலைவர்கள்தான் இந்தியாவுக்கும் கோவாவுக்கும் தேவை என்றார்.












Click it and Unblock the Notifications