"இந்து" என்ற வார்த்தைக்கு அர்த்தம் கிடையாது.. இந்தியா இந்து நாடாக அறிவித்ததே இல்லை – உச்சநீதிமன்ற நீதிபதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ''அரசியலமைப்பு ரீதியாக இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. சிந்து நதிக்கு அப்பால் வசித்தவர்களை குறிக்க வரலாற்று ரீதியாக பயன்படுத்தப்பட்ட ஒரு பொதுவான சொல் தான் 'இந்து'. இந்து என்பதற்கு வேறு எந்த அர்த்தமும் இல்லை. இந்தியா தன்னை ஒருபோதும் இந்து நாடாக அறிவித்து கொண்டதில்லை'' என்று உச்சநீதிமன்ற நீதிபதி கோடீஸ்வர சிங் கூறியுள்ளார்.

டெல்லியில் தேசிய சட்ட நிறுவனம் பல்கலைக்கழக மாணவர் வழக்கறிஞர் சங்கத்தின் (NLIU-SBA) 2026 மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் உச்சநீதிமன்ற நீதிபதி என் கோடீஸ்வர சிங், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ தர்மாதிஹரி உள்ளிட்டவர்கள் பங்கேற்று பேசினர்.

அப்போது இந்தியாவை ஒரு மத அடையாளத்துக்குள் அடக்கிவிட முடியாது. இந்தியா ஒருபோதும் இந்து நாடாக அறிவித்தது இல்லை என்பது உள்ளிட்ட கருத்துகளை உச்சநீதிமன்ற நீதிபதி கோடீஸ்வர சிங் பேசினார். இதுபற்றி கோடீஸ்வர சிங் கூறியதாவது:

வழிகாட்டும் அரசியல் சாசனம்

''இந்தியாவின் சுதந்திரத்திற்கான தொலைநோக்கு பார்வை, லட்சியங்களை வகுத்து எதிர்காலத்துக்கு தொடர்ந்து வழிகாட்டும் ஆவணம் தான் அரசியல் சாசனம். நம்மிடம் மிக ஆக்கப்பூர்வமான சட்ட ஆவணம் உள்ளது. இது வெறும் சட்ட ஆவணம் மட்டுமல்ல. இது ஒரு வரலாற்று ஆவணம். ஒரு சமூக ஆவணம். இது ஒரு ஆக்கப்பூர்வமான ஆவணம்.

இந்திய சட்ட அமைப்பில் மேற்கத்திய தாக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் . ஏனென்றால் மேற்கத்திய சட்டக் கல்வி முறை இந்தியாவின் சமகாலச் சூழ்நிலைகள் அனைத்தையும் கையாள முடியாது. இந்திய சட்ட அமைப்பு நம்முடைய சமூக எதார்த்தங்களுக்கு ஏற்றவாறு சட்ட முறை செயல்பட வேண்டும்.

பிராந்திய மொழிகளில் சட்டம்

மொழி தடைகள் மற்றும் சிக்கலான சட்ட சொற்களால் மக்களுக்கும், சட்டத்துறைக்கும் இடையோன தொடர்பு குறைந்து வருகிறது. பொதுமக்கள் தங்களுக்கு தெரிந்த மொழியில் வழக்காட விரும்புகிறார். இதனால் நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். இது அனைவருக்கும் நீதியை உறுதிப்படுத்தும்.

இந்து நாடாக அறிவித்தது இல்லை

அரசியலமைப்பு ரீதியாக இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்தியாவை ஒரு மத அடையாளத்திற்குள் அடக்கிவிட முடியாது. இந்தியாவை போல் அனைத்து மதங்களையும் பின்பற்றும் நாடுகள் மிகச்சிலவே உள்ளன. இந்தியா தன்னை ஒருபோதும் இந்து நாடாக அறிவித்து கொண்டதில்லை. சிந்து நதிக்கு அப்பால் வசித்தவர்களை குறிக்க வரலாற்று ரீதியாக பயன்படுத்தப்பட்ட ஒரு பொதுவான சொல் தான் 'இந்து'. அதன் பின்னணியில் வேறு அர்த்தம் இல்லை'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+