அமெரிக்கா பிரேசிலை விட வேகமாக 2 மில்லியன் பாதிப்பை கடந்த இந்தியா.. ஷாக் தகவல்
டெல்லி: இந்தியாவில் 22 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் பிரேசிலை கொரோனா தொற்று இந்தியாவில வேகமாக பரவி வருவதாக புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் பிரேசிலை விட மிக வேகமாக 20 லட்சம் நோயாளிகளை இந்தியா எட்டியிருக்கிறது.
இந்தியாவில் கேரளாவின் திரிச்சூரில் ஜனவரி 30 ஆம் தேதி முதல் நபர் கொரானாவால் பாதிக்கப்பட்டார். ஜூன் 26 அன்று 5 லட்சம் (அரை மில்லியன்) நோயாளிகள் என்ற நிலையை இந்தியா எட்டியது. ஆனால் அடுத்த 5 லட்சத்தை எட்ட இந்தியாவுக்கு 149 நாட்கள் பிடித்தன
ஆனால் இதற்கு மாறாக, அமெரிக்காவும் பிரேசிலும் அரை மில்லியன் நோயாளிகளை மிக வேகமாக எட்டியன, அமெரிக்கா 81 நாளிலும் பிரேசில் 96 நாட்களிலும் எட்டின. ஆனால் இரு நாடுகளும் ஒரு மில்லியன் கொரோனா பாதிப்பை எட்ட இந்தியாவை விட சற்றே குறைவான நேரத்தை எடுத்தன. அடுத்த 5 லட்சம் கொரோனா கேஸ்களை எட்ட, அமெரிக்கா 17 நாட்கள் மற்றும் பிரேசில் 19 நாட்கள் பதிவு செய்யதன. ஆனால் இந்தியா 20 நாட்கள் எடுத்தது.

10 லட்சம் பேர்
அப்போதிலிருந்து, இந்தியாவில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. வெறும் 21 நாட்களில் இரண்டாவது மில்லியனை இந்தியா தொட்டது. அதாவது 21 நாளில் 10 லட்சம் பேர் இந்தியாவில தொற்றால் பாதிக்கப்ட்டனர். ஆனால் அமெரிக்காவில் 43 நாட்கள் ஆனது. பிரேசிலில் 27 நாட்கள் தான் ஆனது.

அமெரிக்கா பிரேசில்
அமெரிக்கா மற்றும் பிரேசிலை விட மிகவேமாக கொரோனா தொற்றின் 20 லட்சம் இலக்கை இந்தியா அடைந்திருப்பதால் விரைவில் இந்த இரு நாடுகளையும் பாதிப்பில் மிஞ்சினாலும் ஆச்சயப்படுவதற்கு இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

இந்தியா நிலவரம்
இரண்டாவது மில்லியன் கேஸ்களில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் டெல்லி ஆகியவற்றின் பங்கு குறைந்து வருவதோடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், தொற்றுநோய் எந்த அளவிற்கு வேகமாக பரவியுள்ளது என்பதை இப்போதைய எண்ணிக்கை நிரூபிக்கிறது. தற்போது இந்தியாவில் 22,14,137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 44,466 பேர் உயிரிழந்துள்ளனர்.
Recommended Video

தெளிவாக தெரியவில்லை
இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடும் போத தற்போதைய நிலையில் இறப்பு குறைவாகவே உள்ளது. இரண்டாவது மில்லியன் கேஸ்களில் முதல் மில்லியனில் ஏறபட்ட இறப்பைக் காட்டிலும் குறைவான இறப்புகளைக் கண்டுள்ளன. இந்தியா ஒரு மில்லியன் கேஸ்களில் 25,000 க்கும் அதிகமான இறப்புகளைப் பதிவுசெய்தது, இறப்பு விகிதம் 2.55 சதவீதம் ஆகும். ஆனால் இரண்டாவது மில்லியனில் வெறும் 16,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகி உள்ளது. இறப்பு விகிதம் 2.06 சதவீதம் ஆகும். ஆனால் தற்போது நோய்த்தொற்றுகள் இப்போது மிக விரைவான விகிதத்தில் பதிவாகி வருகின்றன, மேலும் ஒரு நோயாளி கண்டுபிடிக்கப்பட்டதற்கும் நோயாளியின் இறப்புக்கும் இடையில் சராசரியாக 10 நாள் இடைவெளி இருப்பதால், தற்போதைய இறப்பு விகிதங்கள் எப்படி செல்கிறது என்பதை தெளிவாக விளக்கவில்லை.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications