ஏர் சைரன் & பிளாக் அவுட்.. சென்னை உட்பட 259 இடங்கள்.. நாளை எங்கு, எப்படி போர் ஒத்திகை நடைபெறும்!
டெல்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே நாடு முழுக்க நாளை 259 இடங்களில் போர் ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கல்பாக்கத்தில் போர் ஒத்திகை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த மாதம் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.

போர் ஒத்திகை
இதற்கிடையே நாடு முழுக்க போர் ஒத்திகையை நடத்த மத்திய அரசு நேற்றைய தினம் அறிவுறுத்தியிருந்தது. நாளே மே 7ம் தேதி இந்தப் போர் ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே நாட்டில் எந்தெந்த நகரங்களில் இந்தப் போர் ஒத்திகை நடைபெறும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
259 இடங்கள்
அதன்படி நாளைய தினம் நாடு முழுக்க 259 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கல்பாக்கம் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. மேலும் டெல்லி, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் போர் ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிவு 1
இந்த 259 மாவட்டங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியான போர் ஒத்திகை நடைபெறும். இதில் பிரிவு ஒன்றில் தேசிய தலைநகரான டெல்லி இடம்பெற்றுள்ளது. மேலும் குஜராத் மாநிலத்தில் சூரத், வதோரா, காக்ராபூர்; மகாராஷ்டிராவில் மும்பை, உரான், தாராபூர்; தல்ச்சர் (ஒடியா), ராஜஸ்தானில், கோட்டா, ராவத்-பட்டா; தமிழ்நாட்டில் சென்னை, கல்பாக்கம்; உத்தரப் பிரதேசத்தில் புலந்த்ஷஹர் ஆகிய 13 இடங்கள் இடம்பெற்றுள்ளது.
அதேபோல 2ம் பிரிவில் மொத்தம் அதிகபட்சமாக 201 இடங்கள் உள்ளன. மூன்றாவது பிரிவில் 45 இடங்கள் உள்ளன. இதுபோல மொத்தம் 259 இடங்களில் இந்தச் சோதனை நடைபெறுகிறது.
ஏர் சைரன், பிளாக் அவுட்
இந்தப் போர் ஒத்திகையின் போது சில அடிப்படை விஷயங்கள் பொதுமக்களுக்குச் சொல்லித் தரப்படும். அதாவது ஏர் சைரன்கள் ஒலித்தால் உடனடியாக எப்படிப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.. போர்க் காலங்களில் முக்கியமான கட்டிடங்களில் மின்விளக்குகளை முழுமையாக அணைத்து எப்படி அதைப் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்டவை இதில் சொல்லித் தரப்படும்.

இந்தப் போர் ஒத்திகை நடைபெறும் பல்வேறு மாநிலங்கள் எல்லைக்கு அருகே அமைந்துள்ளன. ராஜஸ்தான், பஞ்சாப் காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் பாகிஸ்தானுடன் எல்லையை பகிரும் நிலையில், அங்கு நடக்கும் போர் ஒத்திகைகள் முக்கியத்துவம் பெறுகிறது. அதேபோல மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களும் சீனா, வங்கதேசம் உள்ளிட்ட மாநிலங்களுடன் எல்லையைப் பகிரும் நிலையில், அங்கும் போர் ஒத்திகை முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
1971ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறை
முதலுதவி கிட்கள், டார்ச்கள், மெழுகுவர்த்திகளைத் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும், தொழில்நுட்பச் சிக்கல் ஏற்படலாம் என்பதால் கையில் ரொக்கத்தையும் எடுத்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 1971ம் ஆண்டுக்குப் பிறகு போர் ஒத்திகை நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.

-
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்!












Click it and Unblock the Notifications