Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏர் சைரன் & பிளாக் அவுட்.. சென்னை உட்பட 259 இடங்கள்.. நாளை எங்கு, எப்படி போர் ஒத்திகை நடைபெறும்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே நாடு முழுக்க நாளை 259 இடங்களில் போர் ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கல்பாக்கத்தில் போர் ஒத்திகை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த மாதம் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.

India pakistan kashmir

போர் ஒத்திகை

இதற்கிடையே நாடு முழுக்க போர் ஒத்திகையை நடத்த மத்திய அரசு நேற்றைய தினம் அறிவுறுத்தியிருந்தது. நாளே மே 7ம் தேதி இந்தப் போர் ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே நாட்டில் எந்தெந்த நகரங்களில் இந்தப் போர் ஒத்திகை நடைபெறும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

259 இடங்கள்

அதன்படி நாளைய தினம் நாடு முழுக்க 259 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கல்பாக்கம் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. மேலும் டெல்லி, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் போர் ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

India pakistan kashmir

பிரிவு 1

இந்த 259 மாவட்டங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியான போர் ஒத்திகை நடைபெறும். இதில் பிரிவு ஒன்றில் தேசிய தலைநகரான டெல்லி இடம்பெற்றுள்ளது. மேலும் குஜராத் மாநிலத்தில் சூரத், வதோரா, காக்ராபூர்; மகாராஷ்டிராவில் மும்பை, உரான், தாராபூர்; தல்ச்சர் (ஒடியா), ராஜஸ்தானில், கோட்டா, ராவத்-பட்டா; தமிழ்நாட்டில் சென்னை, கல்பாக்கம்; உத்தரப் பிரதேசத்தில் புலந்த்ஷஹர் ஆகிய 13 இடங்கள் இடம்பெற்றுள்ளது.

அதேபோல 2ம் பிரிவில் மொத்தம் அதிகபட்சமாக 201 இடங்கள் உள்ளன. மூன்றாவது பிரிவில் 45 இடங்கள் உள்ளன. இதுபோல மொத்தம் 259 இடங்களில் இந்தச் சோதனை நடைபெறுகிறது.

ஏர் சைரன், பிளாக் அவுட்

இந்தப் போர் ஒத்திகையின் போது சில அடிப்படை விஷயங்கள் பொதுமக்களுக்குச் சொல்லித் தரப்படும். அதாவது ஏர் சைரன்கள் ஒலித்தால் உடனடியாக எப்படிப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.. போர்க் காலங்களில் முக்கியமான கட்டிடங்களில் மின்விளக்குகளை முழுமையாக அணைத்து எப்படி அதைப் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்டவை இதில் சொல்லித் தரப்படும்.

India pakistan kashmir

இந்தப் போர் ஒத்திகை நடைபெறும் பல்வேறு மாநிலங்கள் எல்லைக்கு அருகே அமைந்துள்ளன. ராஜஸ்தான், பஞ்சாப் காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் பாகிஸ்தானுடன் எல்லையை பகிரும் நிலையில், அங்கு நடக்கும் போர் ஒத்திகைகள் முக்கியத்துவம் பெறுகிறது. அதேபோல மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களும் சீனா, வங்கதேசம் உள்ளிட்ட மாநிலங்களுடன் எல்லையைப் பகிரும் நிலையில், அங்கும் போர் ஒத்திகை முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

1971ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறை

முதலுதவி கிட்கள், டார்ச்கள், மெழுகுவர்த்திகளைத் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும், தொழில்நுட்பச் சிக்கல் ஏற்படலாம் என்பதால் கையில் ரொக்கத்தையும் எடுத்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 1971ம் ஆண்டுக்குப் பிறகு போர் ஒத்திகை நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.

India pakistan kashmir
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+