ஊரடங்கு தளர்வால் மே இறுதியில் செகண்ட் வேவ்க்கு தயாராகும் இந்தியா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மே 3 க்குப் பிறகு லாக்டவுனை "படிப்படியாக" நீக்குவதற்கான பல்வேறு விருப்பங்களை மத்திய அரசு கவனித்து வருகிறது. அத்துடன், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு இரட்டிப்பாகும் நேரம் 12 நாட்களாக அதிகரிக்கும் என்றும் நம்புகிறது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், மே மாத இறுதியில் அல்லது ஜூன் தொடக்கத்தில் மத்திய அரசு இரண்டாவது பரவலுக்கும் (செகண்ட் வேவ்க்கு) தயாராகி வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Recommended Video

    கொரோனாவின் செகண்ட் வேவ்க்கு தயாராகும் இந்தியா?

    திங்களன்று, மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் பேட்டி அளிக்கு போது , ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்க 3.4 நாட்கள் ஆனது. ஆனால் இப்போது அதற்கு 7.5 நாட்கள் ஆகிறது. டெல்லியில் இருமடங்காக 8.5 நாட்களும், தமிழகத்தில் 14 நாட்களும், கர்நாடகாவில் 9.2 நாட்களும் ஆகிறது.

    அதாவது நோய் பரவும் வேகம் குறைந்துள்ளது. 18 மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேசங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. கடந்த 14 நாட்களில் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 59 மாவட்டங்களில் புதிதாக ஒரு நோயாளி கூட உருவாகவில்லை. என்றார்.

    12 நாட்கள் ஆகும்

    12 நாட்கள் ஆகும்

    இந்நிலையில் சுகாதாரத்துறை வட்டாரத்தினர் மேலும் கூறுகையில், நமது மோசமான நேரத்தில், கொரோனா வைரஸ் இரட்டிப்பு நேரம் 3.4 நாட்கள் ஆக இருந்தது. இந்நிலையில் ஏப்ரல் இறுதி அல்லது மே மாத தொடக்கத்தில் 12 நாட்களை தொடுவோம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், ஆனால் அதற்குப் பிறகு, லாக்டவுன் நிச்சயமாக ஒரே நேரத்தில் அகற்றப்படாது - படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்படும்..

    இந்தியா தயார்

    இந்தியா தயார்

    மே மாதத்தின் பிற்பகுதியிலோ அல்லது ஜூன் மாத தொடக்கத்திலோ இந்தியா இரண்டாவது உச்சத்தைப் (செகண்ட் வேவ்) எதிர்பார்க்கிறோம். ஆனால் இப்போது விழிப்புணர்வு நிலைகள் அதிகமாக உள்ளன, மேலும் சமூக விலகல், முகமூடிகள் போன்றவற்றைப் மக்கள் அதிகம் பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள். வைரஸ் இரட்டிப்பாகும் நேரம் 5 நாட்களுக்கு கீழே குறையும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

    செப்டம்பர் வரை

    செப்டம்பர் வரை

    இந்த வைரஸ் பாதிப்பு நகர்ப்புற மற்றும் பெரிய நகர்ப்புற பகுதிகளை மையமாகக் கொண்டிருக்கும், அங்கு கொரோனா வைரஸ் மேலாண்மை கிராமப்புறங்களை விட சவாலாக இருக்கும். மும்பை, இந்தூர் மற்றும் சண்டிகர் போன்ற நகரங்களில் பல எதிர்பாராத நிகழ்வுகள் நடந்து வருகின்றன என்றார்கள்- கொரோனா வைரஸ் பரவுவது குறைவதை பொறுத்து, குறைந்தபட்சம் செப்டம்பர் வரை, பாதி அளவு அல்லது குறிப்பிட்ட அளவு ஊரடங்குகள் மற்றும் தளர்வுகள் இருக்கும் என்பதற்கான வாய்ப்பு உள்ளன.

    மருத்துவ கட்டமைப்பு

    மருத்துவ கட்டமைப்பு

    இந்தியாவின் வைரஸின் இரண்டாவது அலை மார்ச் மாத உயர்வான 3.4 நாட்களை இரட்டிப்பாக்கும் நேரத்தை எட்டாது என்று அரசாங்கம் நம்புகின்ற அதே வேளையில், கொரோனா வைரஸ் பரவுவது அதிகரிக்கும் என்பதையே அரசின் பேச்சுக்கள் குறிக்கிறது. இருப்பினும், மருத்துவ உள்கட்டமைப்பு - மருத்துவமனை படுக்கைகள், பிபிஇ மற்றும் வென்டிலேட்டர்கள் உள்ளிட்டவை- மார்ச் மாதத்தில் இருந்ததை விட ஜூன் மாதத்தில் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே 3 க்கு பிறகு லாக்டவுன் எவ்வளவு நாட்கள் உயர்த்தப்படும் என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லை என்றாலும், சுகாதார அமைச்சகம் மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என வகைப்படுத்துவது கவனமாக கவனிக்கப்படுகிறது.

    எப்படி வாழ்க்கை கட்டமைப்பு

    எப்படி வாழ்க்கை கட்டமைப்பு

    தற்போது, ​​ 321 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை. 77 மாவட்டங்கள் 7 நாட்களாக வழக்குகளைப் பதிவு செய்யவில்லை; 14 நாட்களுக்கு 62 மாவட்டங்களும்; 21 நாட்களுக்கு 17 மாவட்டங்களும்; மற்றும் 3 மாவட்டங்களில் (மஹே, குடகு உள்பட ) 28 நாட்களாகவும் கொரோனா பாதிப்பு இல்லை. இதனால் அந்த மாவட்டங்கள் ஆரஞ்சு, பச்சை மண்டலுக்கு மாற்றப்படும். இததனிடையே லாக்டவுன் திரும்ப பெற்ற பின் வாழ்க்கையை எவ்வாறு கட்டமைப்பது என்பது குறித்த யோசனையைப் பெற, தென் கொரியா, சீனா போன்ற சர்வதேச மாடல்களையும் அரசாங்கம் கவனித்து வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+