இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு சற்று குறைவு- 2,76,261 பேருக்கு கொரோனா உறுதி- 3,880 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,76,261. கடந்த 24 மணிநேரத்தில் 3,880 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,55,35,512 ஆக உள்ளது. உலகின் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 34,30,996. உலகம் முழுவதும் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 14,45,62,358.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. புதன்கிழமையன்று மட்டும் ஒருநாள் பாதிப்பு 2,76,261 ஆக இருந்தது. அதேபோல் கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா மரணங்கள் 4 ஆயிரத்தை தாண்டியதாக பேரச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. கடந்த 24 மணிநேரத்தில் 3,880 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,57,71,405. நாட்டில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2,87,156. நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,23,48,683. தற்போதைய நிலையில் நமது நாட்டில் 31,35,566 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் ஒருநாள் பாதிப்பு சற்று குறைந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் 34,031 பேருக்கு நேற்ற் கொரோனா உறுதியானது. மேலும் மகாராஷ்டிராவில் ஒருநாள் கொரோனா மரணங்கள் 1,000-த்தை தாண்டியதாக இருந்தது. இது தற்போது 594 ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் 34,875; கர்நாடகாவில் 34,281; கேரளாவில் 32,762 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. கர்நாடகாவில் 468 பேரும் தமிழகத்தில் 365 பேரும் நேற்று கொரோனாவால் மரணம் அடைந்தனர்.












Click it and Unblock the Notifications