இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2-ம் நாளாக 3,000-த்தை தாண்டியது! 24 மணிநேரத்தில் 3,095 பேருக்கு தொற்று!
டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2-வது நாளாக 3,000-த்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,095 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 1,000; 2,000 என உயர்ந்து கொண்டிருந்தது ஒருநாள் கொரோனா பாதிப்பு. நேற்று முன்தினம் காலையுடனான 24 மணிநேரத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,151 ஆக இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலையுடனான 24 மணிநேரத்தில் இந்தியாவின் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,000-த்தை தாண்டியது. இந்தியாவில் 3016 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இன்று 2-வது நாளாக கொரோனா பாதிப்பு 3,000-த்தை தாண்டி உள்ளது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,095 ஆக பதிவாகி உள்ளது.
கொரோனா நிலவரம் தொடர்பான மத்திய அரசு அறிக்கை:
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.65 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.20 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.86 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும். கடந்த 24 மணி நேரத்தில் 6,553 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் தற்போது 15,208 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.03 சதவீதமாகும். தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.78 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 1,390 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொதம் 4,41,69,711 பேர். கடந்த 24 மணி நேரத்தில் 3,095 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 2.61% வாராந்திர பாதிப்பு விகிதம் 1.91% இதுவரை மொத்தம் 92.15 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,18,694 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications