இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 5676; ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 37,000-த்தை தாண்டியது
டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 5,676 ஆக பதிவாகி உள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிறவர்கள் எண்ணிக்கை அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 37,000 ஆகவும் அதிகரித்துள்ளது. மொத்த ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 37.093.

இந்தியாவில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 5,880 ஆக பதிவானது. மேலும் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிறவர்கள் அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 35,199 ஆக பதிவாகி இருந்தது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விகிதமானது 3.38%-ல் இருந்து 6.91% ஆக உயர்ந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை 8 மணியுடனான 24 மணிநேரத்தில் நாட்டின் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,676 ஆக பதிவானது. கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 37,093 ஆகவும் உயர்ந்தது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 21 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,31,000.
டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சட்டசபை தேர்தல் நடைபெறும் கர்நாடகாவில் 2 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர். இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 4.47 கோடி. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4.42 கோடி பேர்.












Click it and Unblock the Notifications