இந்தியாவில் ஒரே நாளில் 1.32 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா.. மத்திய சுகாதாரத் துறை
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.32 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
24 மணி நேரத்தில் அனைத்து மாநிலங்களிலும் பதிவாகும் கொரோனா தொற்று நிலவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தினந்தோறும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த 24 மணி நேர பாதிப்பை தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் ஒரே நாளில் 1,32,788 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் இதுவரை 2,83,07,832 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அது போல் 2,31,456 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். இதுவரை 2,61,79,085 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். ஒரே நாளில் 3,207 பேர் மரணமடைந்துள்ளார்கள். இதுவரை 3,35,102 பேர் பலியாகிவிட்டனர்.
தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 17,93,645 பேராகும். இதுவரை 21,85,46,667 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கிய நிலையில் தற்போது படிப்படியாக ஒன்றரை லட்சத்திற்கு கீழ் வந்துள்ளது.












Click it and Unblock the Notifications