இந்தியாவில் கொரோனாவில் இருந்து 2.63 கோடி பேர் மீண்டனர் - 3.37 லட்சம் பேர் மரணம்
நாடு முழுவதும் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 2,11,499 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,63,90,584 பேராக அதிகரித்துள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,34,154 பேராக அதிகரித்துள்ளது. இதன் மூலம் 2,84,41,986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 2,11,499 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,63,90,584 பேராக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் 2,887 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 3,37,989 பேராக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவது நம்பிக்கையை அதிகரித்து வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 17,13,413 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் 2ஆம் தேதி வரைக்கும் நாடு முழுவதும் 22,10,43,693 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
ஜூன் 2ஆம் தேதி வரைக்கும் நாடு முழுவதும் இதுவரைக்கும் 35,37,82,648 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 21,59,873 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.