நாடு முழுக்க.. ஒரே நாளில் சுமார் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா.. தமிழகத்திலும் அதிகரிப்பு
டெல்லி: இந்தியாவில் 24 மணி நேரத்தில் 39,726 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால்154 பேர் பலியாகியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியா முழுக்க கொரோனா வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா வேகமாக பரவியது. பிறகு, இது இரண்டாவது அலையாக இருக்க கூடும் என்று மருத்துவ வல்லுநர்கள் சந்தேகிக்கிறார்கள்.

தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. ஒரு நாள் பாதிப்பு அளவு 1000 என்ற அளவை நெருங்கியுள்ளது. கர்நாடகாவிலும் தினசரி பதிவாகும் கொரோனா பாதிப்பு 1000த்தை தாண்டியுள்ளது.
இரு மாநிலங்களிலும், அதன் தலைநகரங்களில்தான் அதிகமாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. சென்னையில், தினசரி பாதிப்பு 500ஐ நெருங்கியுள்ளது. பெங்களூரில் அது 925 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது. நகரில் 5 கிளஸ்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், நமது நாட்டில் இதுவரை 3,93,39,817 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications