இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 41,506 பேருக்கு கொரோனா; 895 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 41,506 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 895 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,72,76,198 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 40,42,981. கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 17,12.51,586.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 41,506 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,08,36,231.
கடந்த 24 மணிநேர்த்தில் இந்தியாவில் 895 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,08,040 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 41,526 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,99,75,064.
இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,54,118. இதுவரை நாடு முழுவதும் 37,60,32,586 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications