கேரளா, கர்நாடகாவில் கிடுகிடுவென அதிகரித்த கொரோனா பாதிப்பு; ஆக்டிவ் கேஸ்கள் 4,000 நோக்கி பாய்ச்சல்!
டெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிற ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 4,000-ஐ நோக்கி சென்றுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனாவுக்கு 3742 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலக நாடுகளில் புதிய கொரோனா திரிபான JN1 கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 655 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 424 ஆக பதிவாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 21 ஆக இருந்தது. கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 104 ஆக அதிகரித்துள்ளது.
கேரளா - 424
கர்நாடகா -104
தமிழ்நாடு -21
குஜராத் -11
மகாராஷ்டிரா- 35
தெலுங்கானா - 12
கோவா - 10
புதுச்சேரி- 16
ஆந்திரா - 6
ஹரியானா -2
டெல்லி- 16
காஷ்மீர் -1
பஞ்சாப்- 2
இந்தியாவில் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுவோர் -ஆக்டிவ் கேஸ்களின் மொத்த எண்ணிக்கை 3742
கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் அதிகம் உள்ள மாநிலங்கள்:
கேரளா - 3000
கர்நாடகா - 271
தமிழ்நாடு 123
மகாராஷ்டிரா 103
குஜராத் 54
புதுச்சேரி 24
கோவா 32
தெலுங்கானா 38












Click it and Unblock the Notifications