இந்தியாவில் இருமடங்கு அதிகரிப்பு... நேற்று 90,928 பேருக்கு கொரோனா உறுதி- 325 பேர் உயிரிழப்பு
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் நேற்று மட்டும் 90,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் ஒரே நாளில் 325 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு மிக மோசமாக பதிவாகி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பரவல் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இன்று காலை 8 மணியுடனான கடந்த 24 மணி நேரத்தில் அதாவது ஒரே நாளில் 90,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாளை ஒப்பிடுகையில் 56.5% அதிகமாகும். இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,51,09,286.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 325 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,82,876. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று மட்டும் 19,206 பேர் மீண்டுள்ளனர். நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3,43,41,009.
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிக கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 26,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேற்கு வங்கத்தில் 14,022 பேருக்கும் டெல்லியில் 10,665 பேருக்கும் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் நேற்று 4,862 பேருக்கும் கேரளாவில் 4,801 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.












Click it and Unblock the Notifications