நேபாளத்தில் இந்திய மலையேற்ற வீரர் அனுராக் மாலு மாயம்! அன்னபூர்னா சிகரம் ஏற சென்றவர் திரும்பவில்லை!
டெல்லி: நேபாளத்தில் இந்திய மலையேற்ற வீரர் அனுராக் மாலு முகாம் திரும்பவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. அன்னபூர்னா சிகரத்துக்கு செல்ல முயன்ற நிலையில் அனுராக் மாலு காணவில்லை என கூறப்படுகிறது.
இந்தியாவின் மலையேற்ற வீரர்களில் ராஜஸ்தானின் அனுராக் மாலு பல சாதனைகளைப் படைத்தவர். ராஜஸ்தான் மாநிலம் கிஷன்கர்க் என்ற பகுதியைச் சேர்ந்த அனுராக் மாலு, REX KaramVeer Chakra விருது பெற்றவர். பல்வேறு சர்வதேச விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றவர் அனுராக் மாலு.

8000 மீட்டர் உயரத்துக்கும் மேல் உள்ள 14 சிகரங்களை ஏறி சாதனை படைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் அனுராக் மாலு. இதனடிப்படையில் இமயமலையின் 10-வது சிகரமான அன்னபூர்னாவை சென்றடைய திட்டமிட்டிருந்தார் அனுராக் மாலு. நேபாள நாட்டில் இருந்து அன்னபூர்ணா சிகரத்தை சென்றடைய நேற்று காலை புறப்பட்டார் அனுராக் மாலு. ஆனால் அவரிடம் இருந்து தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் பலன் கிடைக்கவில்லை.
இதனையடுத்து மலையேற்ற குழுவின் பொறுப்பாளர் மிங்மா ஷெர்பா, அனுராக் மாலு காணவில்லை என்ற தகவலை வெளியிட்டார். இன்றும் அனுராக் மாலுவை தேடும் பணி தொடரும் எனவும் கூறியுள்ளார் மிங்மா ஷெர்பா.












Click it and Unblock the Notifications