பழையன கழிதலும்..புதியன புகுதலும்! வருகிறது புதிய வருமான வரி மசோதா.. ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை
டெல்லி: கடந்த 60 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த பழைய வருமான வரிச் சட்டத்திற்கு பதிலாக புதிய வருமான வரி மசோதா அறிமுகப்படுத்தப்படும் என பட்ஜெட் அறிவிப்பின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இந்த நிலையில் புதிய வருமான வரி மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசின் 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான கடந்த 1ஆம் தேதி காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 8வது முறையாக பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கிறார்.

உலக அளவில் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியாவை உருவாக்கும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அனைவருக்குமான வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி இந்த அரசு பயணித்து வருகிறது எனக் கூறி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா.
பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க மாற்றமாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதாவது மாதம் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்கள் அதாவது ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள் வரி செலுத்த தேவையில்லை என்ற அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 2023ல் 7 லட்சமாக உயர்த்தப்பட்ட வருமான வரி உச்சவரம்பு தற்போது 12 லட்சம் ரூபாயாக அதிகரித்து இருக்கிறது.
இதன் மூலம் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை மாத ஊதியம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பழைய வருமான வரி சட்டத்திற்கு பதிலாக புதிய வருமான வரி சட்டம் தாக்கல் செய்யப்படும் என மதிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.
இந்த நிலையில் வருமான வரி சட்டத்திற்கு பதிலாக புதிய வருமான வரி மசோதாவுக்கு மதிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் விதிகள் மற்றும் விளக்கங்கள் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக இருக்கும், நீண்ட வாக்கியங்களாக விளக்கங்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் புதிய வருமான வரி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலை குழுவுக்கு அனுப்பப்பட உள்ளது. தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் பிப்ரவரி 13-ஆம் தேதி வரை நடக்கிறது. அதற்கு பிறகு மார்ச் 10ஆம் தேதி நாடாளுமன்றம் கூடி ஏப்ரல் நான்காம் தேதி வரை நடக்கவிருக்கிறது. எனவே தற்போது நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே இந்த புதிய வருமான வரி மசோதா அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications