இந்தியாவில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை.. பலி 239ஆக உயர்வு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் மொத்த கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை 7447 ஆக உயர்ந்துள்ளது. (6565 சிகிச்சையில் உள்ள நோயாளிகள்). இதில் நல்ல விஷயம் என்னவென்றால், இதுவரை 643 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டு அல்லது வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதேநேரம், நேற்று மாலை நிலவரப்படி 206ஆக இருந்த கொரோனா இறப்பு எண்ணிக்கை, இன்று காலை 239 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த தகவலை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Indias total number of Coronavirus positive cases rises to 7447

மகாராஷ்டிராவில் 1588, டெல்லியில் 898 நோயாளிகள் உள்ளனர். உத்தர பிரதேசத்தில் 431 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், நேற்று மாலை நிலவரப்படி, 911 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்தான், கொரோனா நோய் தடுப்பு மற்றும் லாக்டவுன் நீட்டிப்பு குறித்து, பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையான இன்று, அனைத்து மாநிலங்களின் முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்துகிறார். பல முக்கிய முடிவுகள் இதில் எட்டப்படலாம் என தெரிகிறது.

இந்த நிலையில் லாக்டவுன் நீட்டிக்கப்பட வேண்டுமா என்று முதல்வர்களுடனான கூட்டத்தில் மோடி முடிவு செய்வார். வேகமாக பரவும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பல மாநிலங்கள் லாக்டவுன் நீட்டிப்பை ஆதரித்ததையடுத்து, ஏப்ரல் 14 க்கு அப்பால் மத்திய அரசு நாடு முழுவதும் லாக்டவுனை நீட்டிக்கக்கூடும் என்றுதான் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+