Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து மீண்டும் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா, இந்தியாவுக்கு அனுமதி கொடுத்திருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சுமார் 3 கோடி பேரல் கச்சா எண்ணெய்யை இந்திய நிறுவனங்கள் வாங்கியிருக்கின்றன.

ரஷ்ய எண்ணெய்யை வாங்க அமெரிக்கா அனுமதி அளித்தவுடன், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் வேகமாக செயல்பட்டு கொள்முதலை முடித்திருப்பதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், தற்காலிக விலக்கு வந்ததும் அனைத்து ரஷ்ய சரக்குகளையும் சந்தையில் வாங்கின. ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, இந்தியன் ஆயில் சுமார் 1 கோடி பேரல்களையும், ரிலையன்ஸ் 1 கோடி பேரல்களையும் வாங்கின. எஞ்சியவற்றை பிற இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெற்றன.

முன்பு தள்ளுபடி விலையில் கிடைத்த ரஷ்ய எண்ணெய், இப்போது அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. சர்வதேச 'டேட்டட் பிரெண்ட்' விலையை விட 2 முதல் 8 டாலர்கள் வரை அதிக பிரீமியம் செலுத்தி இந்தியா இந்த எண்ணெயை பெற்றுள்ளது.

அமெரிக்காவின் கருத்து

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறுகையில், "இந்தியா ஒரு பொறுப்பான நாடு. கடந்த காலங்களில் எங்களது பொருளாதாரத் தடைகளுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கியதால், தற்போதைய தற்காலிக எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க இந்த 30 நாள் சலுகையை வழங்கவுள்ளோம்" என்றார்.

எண்ணெய் ஏற்கனவே கப்பலில் ஏற்றப்பட்டதால், ரஷ்யாவுக்குப் புதிதாக எந்த லாபமும் கிடைக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கை உலகளவில் சமநிலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்ய எண்ணெயின் புதிய நிலை

உக்ரைன் படையெடுப்பிற்கு முன், இந்தியா ரஷ்ய எண்ணெயை மிகக் குறைவாகவே இறக்குமதி செய்தது. ஆனால் மேற்கத்தியத் தடைகளால் ரஷ்யா கச்சா எண்ணெய்க்கு அதிக தள்ளுபடி வழங்கியதால், கொள்முதல் அதிகரித்தது. 2024 நடுப்பகுதியில் தினசரி 2 மில்லியன் பேரல்களைத் தாண்டிய இறக்குமதி, வாஷிங்டன் அழுத்தத்தால் குறைந்து பிப்ரவரியில் தினசரி 1.06 மில்லியன் பேரலாக ஆனது.

இந்த விலக்கைத் தொடர்ந்து, இந்திய துணைக் கண்டத்திலிருந்து விலகிச் சென்ற பல எண்ணெய் டேங்கர்கள் இந்தியாவை நோக்கித் திசைமாறின. கப்பல் தகவல்களின்படி, மேலோ (Maylo) மற்றும் சாரா (Sarah) கப்பல்கள் சிங்கப்பூரிலிருந்து இலக்கை மாற்றிக்கொண்டு இந்தியத் துறைமுகங்களை நோக்கிச் செல்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+