தபால் சேவையையும் திடீரென நிறுத்திக் கொண்டது பாகிஸ்தான்.. இந்தியா கடும் கண்டனம்
Recommended Video
டெல்லி: இந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்திக்கொள்வதாக பாகிஸ்தான் இன்று திடீரென அறிவித்துள்ளது. இது சர்வதேச தபால் சேவை மரபுகளுக்கு எதிரானது என இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவுடனான வர்த்தக உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்தது.
அத்துடன் டெல்லியில் உள்ள தங்கள் நாட்டு தூதரை திரும்ப அழைக்கவும், இந்திய தூதரை திருப்பி அனுப்பவும் செய்தது. இந்தியா - பாகிஸ்தான் இடையே இயக்கப்படும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தையும் நிறுத்தியது. வாகா எல்லையை மூடியது.

இந்தியா பதிலடி
இப்படி இரு நாடுகளுக்கும் இடைய உறவில் பெரிய அளவில் விரிசல் விழுந்த நிலையில், இந்தியா பாகிஸ்தான் இடையே போர் வரும், அணு ஆயுத போர் வரும் என்ற தொனியில் ஐநா சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மிரட்டல் விடுத்து பேசினார். இதற்கு இந்தியா அங்கேயே பதிலடி கொடுத்தது.

இந்தியா பதிலடி
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் சனிக்கிழமை இரவு முதல் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் உள்பட 3பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் வீரர்கள் பலி
இந்த தாக்குதலில் 6 முதல் 10 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்த மூன்று தீவிரவாத முகாம்களும் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் நேற்று தெரிவித்தார்.

மத்திய அரசு கண்டம்
இதனை பாகிஸ்தான் ராணுவம் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் இந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்திக்கொள்வதாக பாகிஸ்தான் இன்று திடீரென அறிவித்துள்ளது. இதற்கு மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரவி சங்கர் பிரசாத்
,இது தொடர்பாக அவர் கூறுகையில், எந்த ஒரு நோட்டீசும் வழங்காமல் பாகிஸ்தான் தபால் சேவையை நிறுத்தியிருப்பது சர்வதேச நெறிமுறைகளுக்கு எதிரானது. பாகிஸ்தான் பாகிஸ்தான் தான்.அந்த நாடு எப்போதும் திருந்தப்போவது இல்லை என்றார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications