கோவிஷீல்டு தடுப்பூசி... ஒரு டோஸின் விலை ஆயிரம் ரூபாய்... வெளிநாடுகளுக்கு தொடங்கியது ஏற்றுமதி
டெல்லி: கொரோனா தடுப்பூசியின் வணிக ரீதியான ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ள நிலையில், முதல்கட்டமாகப் பிரேசில் மற்றும் மொராக்கோ நாடுகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. முதல்கட்டமாக மூன்று கோடி முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், நட்பு ரீதியாகப் பூட்டான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியா இலவசமாக ஏற்றுமதி செய்தது. இந்தியாவிலுள்ள முன்களப் பணியாளர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்பதால் தடுப்பூசிகளின் வணிக ரீதியான ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது.
இந்நிலையில், வணிக ரீதியான ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாகவும் இன்று முதல் கொரோனா தடுப்பூசிகளை வணிக ரீதியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்படுவதாகவும் வெளியுறவுத் துறைச் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்தார்.
இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தித் திறன் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு அனைவருக்கும் பயன்படுத்தப்படும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப இந்த முடிவ எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். முதலில் அண்டை நாடுகளுக்கு இலவசமாகத் தடுப்பூசி வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி தற்போது முதல்கட்டமாகப் பிரேசில் மற்றும் மொராக்கோ நாடுகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக விரைவில் தென்னாப்பிரிக்கா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.
முன்னதாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சீரம் நிறுவனத்தின் ஆதார் பூனவல்லா, இந்திய அரசுக்கு முதல்கட்டமாக சில லட்சம் டோஸ்கள் 200 ரூபாய்க்கும், வெளிச் சந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய்க்கும் தடுப்பூசி விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.

கொரோனா வைரஸ் காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகப் பிரேசில் உள்ளது. அந்நாட்டில் இதுவரை 86.99 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தங்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியை வழங்கி இந்தியா உதவ வேண்டும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஜெய்ர் போல்சனாரோ பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications