வெளியான அதிர்ச்சி தகவல்.. 2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பது நிறுத்தம்
டெல்லி: ரூ.2000 நோட்டுக்களை பிரிண்ட் செய்வதை மத்திய அரசு நிறுத்திவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம், அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழப்பு செய்து மத்திய அரசு அறிவித்த பிறகு, 2000 ரூபாய் நோட்டுக்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டன.
பண மதிப்பிழப்பால் கடும் பணத்தட்டுப்பாடு நிலவிய நேரத்தில் 2000 ரூபாய் நோட்டுக்கள் அதிக அளவில் புழக்கத்தில் விடப்பட்டது.
2018ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த மொத்த பண மதிப்பு 18.03 லட்சம் கோடியாக இருந்தது. அதில் 6.73 லட்சம் கோடி ரூபாய், அதாவது 37 சதவீதம், 2000 ரூபாய் நோட்டுக்களாகும். 7.73 லட்சம் கோடி அதாவது 43 சதவீதம் 500 ரூபாய் நோட்டுக்களாகும். மற்றவை அதைவிட குறைந்த மதிப்புள்ள நோட்டுக்கள்.

ஐடியாவே தப்பு
1000 ரூபாய் நோட்டுக்களை நிறுத்திவிட்டு 2000 ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்வது, பண பதுக்கலுக்கும், கருப்பு பண வர்த்தகத்துக்கும் மேலும் உதவி செய்யும் என்று பொருளாதார வல்லுநர்களும், எதிர்க்கட்சிகளும் விமர்சனம் செய்தன. இதை உறுதி செய்வதை போல கடந்த ஏப்ரல் மாதம், நாடு முழுக்க முக்கிய நகரங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது.

2000 நோட்டு பதுக்க எளிதானது
மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவிருந்ததையடுத்து பணம் பதுக்கப்பட்டிருக்கலாம் என்றும் அதிலும், 2000 ரூபாய் நோட்டுக்களை எளிதாக பதுக்கியிருப்பதாகவும் சந்தேகிக்கப்பட்டது. இதை உறுதி செய்யும் விதமாக, வருமான வரித்துறை இக்காலகட்டத்தில் நடத்திய ரெய்டுகளில் 2000 ரூபாய் நோட்டுக்கள்தான் கட்டுக்கட்டாக சிக்கின.

2000 ரூபாய் நோட்டு நிறுத்தம்
இந்த நிலையில்தான், 2000 ரூபாய் நோட்டுக்கள் பிரிண்ட் செய்வது நிறுத்தப்பட்டுவிட்டதாக, மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக, 'தி பிரின்ட்' செய்தி வெளியிட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிப்பு வெளியாகும் என்று கூற முடியாது என்றபோதிலும், மெதுவாக இவை புழக்கத்தில் இருந்து தானாகவே வெளியேறிவிடும் வாய்ப்புள்ளதாக அந்த செய்தி மேலும் கூறுகிறது.

படிப்படியாக குறைக்கப்பட்டது
ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. அதில், 2017-18ம் நிதியாண்டில் 2000 ரூபாய் நோட்டுக்கள் புதிதாக சேர்க்கப்படும் எண்ணிக்கை குறைந்துவிட்டது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இக்காலகட்டத்தில் மொத்த பண மதிப்பில் 7.8% மட்டுமே 2000 ரூபாய் நோட்டுக்கள் புதிதாக சேர்க்கப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது. அதேநேரம், 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பது அதிகரித்துள்ளதாம். 2017ம் ஆண்டு மார்ச் மாதம், 22.5% என்ற அளவில் இருந்த 500 ரூபாய் நோட்டுக்கள் பங்களிப்பு, கடந்த வருடம் மார்ச் மாதம் 42.9 சதவீதமாக உயர்ந்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications