வெளியான அதிர்ச்சி தகவல்.. 2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பது நிறுத்தம்
டெல்லி: ரூ.2000 நோட்டுக்களை பிரிண்ட் செய்வதை மத்திய அரசு நிறுத்திவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம், அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழப்பு செய்து மத்திய அரசு அறிவித்த பிறகு, 2000 ரூபாய் நோட்டுக்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டன.
பண மதிப்பிழப்பால் கடும் பணத்தட்டுப்பாடு நிலவிய நேரத்தில் 2000 ரூபாய் நோட்டுக்கள் அதிக அளவில் புழக்கத்தில் விடப்பட்டது.
2018ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த மொத்த பண மதிப்பு 18.03 லட்சம் கோடியாக இருந்தது. அதில் 6.73 லட்சம் கோடி ரூபாய், அதாவது 37 சதவீதம், 2000 ரூபாய் நோட்டுக்களாகும். 7.73 லட்சம் கோடி அதாவது 43 சதவீதம் 500 ரூபாய் நோட்டுக்களாகும். மற்றவை அதைவிட குறைந்த மதிப்புள்ள நோட்டுக்கள்.

ஐடியாவே தப்பு
1000 ரூபாய் நோட்டுக்களை நிறுத்திவிட்டு 2000 ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்வது, பண பதுக்கலுக்கும், கருப்பு பண வர்த்தகத்துக்கும் மேலும் உதவி செய்யும் என்று பொருளாதார வல்லுநர்களும், எதிர்க்கட்சிகளும் விமர்சனம் செய்தன. இதை உறுதி செய்வதை போல கடந்த ஏப்ரல் மாதம், நாடு முழுக்க முக்கிய நகரங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது.

2000 நோட்டு பதுக்க எளிதானது
மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவிருந்ததையடுத்து பணம் பதுக்கப்பட்டிருக்கலாம் என்றும் அதிலும், 2000 ரூபாய் நோட்டுக்களை எளிதாக பதுக்கியிருப்பதாகவும் சந்தேகிக்கப்பட்டது. இதை உறுதி செய்யும் விதமாக, வருமான வரித்துறை இக்காலகட்டத்தில் நடத்திய ரெய்டுகளில் 2000 ரூபாய் நோட்டுக்கள்தான் கட்டுக்கட்டாக சிக்கின.

2000 ரூபாய் நோட்டு நிறுத்தம்
இந்த நிலையில்தான், 2000 ரூபாய் நோட்டுக்கள் பிரிண்ட் செய்வது நிறுத்தப்பட்டுவிட்டதாக, மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக, 'தி பிரின்ட்' செய்தி வெளியிட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிப்பு வெளியாகும் என்று கூற முடியாது என்றபோதிலும், மெதுவாக இவை புழக்கத்தில் இருந்து தானாகவே வெளியேறிவிடும் வாய்ப்புள்ளதாக அந்த செய்தி மேலும் கூறுகிறது.

படிப்படியாக குறைக்கப்பட்டது
ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. அதில், 2017-18ம் நிதியாண்டில் 2000 ரூபாய் நோட்டுக்கள் புதிதாக சேர்க்கப்படும் எண்ணிக்கை குறைந்துவிட்டது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இக்காலகட்டத்தில் மொத்த பண மதிப்பில் 7.8% மட்டுமே 2000 ரூபாய் நோட்டுக்கள் புதிதாக சேர்க்கப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது. அதேநேரம், 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பது அதிகரித்துள்ளதாம். 2017ம் ஆண்டு மார்ச் மாதம், 22.5% என்ற அளவில் இருந்த 500 ரூபாய் நோட்டுக்கள் பங்களிப்பு, கடந்த வருடம் மார்ச் மாதம் 42.9 சதவீதமாக உயர்ந்தது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications