முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட.. பிரலே ஏவுகணை சோதனை வெற்றி.. சிறப்பம்சம் என்ன?
டெல்லி: முற்றிலுமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள குறுகிய தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் பிரலே என்ற ஏவுகணை சோதனையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாகப் பரிசோதனை செய்துள்ளது.
Recommended Video
இது தொடர்பாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணை 150 முதல் 500 கிமீ வரையிலான இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. 500 முதல் 1,000 கிலோ வரையிலான எரிபொருட்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, மொபைல் லாஞ்சரில் இருந்து ஏவ முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

'பிரலே' என்ற இந்த ஏவுகணை surface-to-surface வகை பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். மேலும், தாக்க வரும் ஏவுகணைகளை இடை மறித்துத் தாக்கி தாக்கி அழிக்கும் வகையிலும் இந்த ஏவுகணை மேம்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர நடுவானில் குறிப்பிட்ட தூரத்தை எட்டியவுடன், தனது பாதையை மாற்றியமைக்கும் திறனையும் இந்த ஏவுகணை கொண்டுள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரை அருகே புதன்கிழமை காலை 10.30 மணியளவில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்குள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து இந்த ஏவுகணை சோதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை வெற்றிபெற்றதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications