55 நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் தரும் இந்தியா.. ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் தர சம்மதம்
டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பபட்ட பல்வேறு நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து வழங்கி வரும் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் அந்த மருந்தை வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
உலகம் முழுவதும் கொரோனாவால் 2134971 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) ஒரு நாளில் மட்டும் 48540 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 143110 பேர் உலகம்முழுவதும் உயிரிழந்துள்ளனர்.
அரபு நாடுகளிலும் கொரோனா பரவல் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. அரபு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் (அமீரகம்) இன்று ஒரு நாளில் மட்டும் 460 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

5825 பேருக்கு பாதிப்பு
ஒட்டுமொத்தமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 5825 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 பேர் உயிரிழந்துள்ளனர். 1095 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் உலகின் பல்வேறு நாடுகளும் கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தையே தற்போது தடுப்பு மருந்தாக பயன்படுத்துகின்றன.

தடையை விலக்கிய இந்தியா
இந்த மருந்தை தயாரித்து ஏற்றுமதி செய்து வரும்நாடு இந்தியா தான். இந்தியாவிடம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை வாங்குவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேரடியாகவே மிரட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.அதன்பிறகு இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்வதற்கான தடையை விலக்கியது.

இந்தியா அளிக்கிறது
தற்போது இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா உள்பட 50க்கும் மேற்பட்ட நாடுகள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை தருமாறு கோரிக்கை வைத்தன. அந்த நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இப்போது ஐக்கிய அரபு அமீரகம் எமிரேட்ஸ் நாடும் தங்களுக்கும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை தருமாறு கோரிக்கை வைத்தது. இதை ஏற்று மருந்தை அனுப்பி வைக்க இநதியா சம்மதித்துள்ளது.

ஏன் இவ்வளவு கிராக்கி
இந்தியாவிடம் இருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (எச்.சி.க்யூ) மருந்தை தற்போது 55 நாடுகள் பெற்று வருகின்றன. அவற்றில் 21 நாடுகள் வணிக அடிப்படையில் பெற்றுள்ளன. மற்ற நாடுகள் மிகக் குறைந்த அளவிலான மானியத்தில் மருந்தை வாங்கி உள்ளன. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து கொரோனாவுக்கு எதிராக நன்கு வேலை செய்வதாக டிரம்ப் சொன்ன பிறகே இந்த மருந்துக்கு உலகம் முழுவதும் பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. எனினும் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் இந்த மருந்தை உட்கொண்டால் மரணமும் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications