Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரம்புடன் கைகோர்க்கும் இந்தியா.. ரூ27,000 கோடிக்கு பெரிய டீல்.. கைக்கு வரும் பி 81 விமானம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது அமெரிக்காவிடம் இருந்து சுமார் ரூ.27 ஆயிரம் கோடிக்கு நவீனரக விமானங்களை இந்தியா வாங்க முடிவு செய்துள்ளது. P-8I என கூறப்படும் இந்த விமானம் நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு மற்றும் கடல்சார் கண்காணிப்பில் கலக்கும். இதற்காக ரூ. 3 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.27,000 கோடி) மதிப்பில் ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீதம் வரியை போட்டார். நம் நாடு அமெரிக்காவின் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக கூறி பரஸ்பர வரி என்ற வகையில் 25 சதவீதம், உக்ரைனில் போர் புரிந்து வரும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு 25 சதவீதம் என்று 50 சதவீதத்தை விதித்தார்.

18 சதவீதம் வரி குறைப்பு

சமீபத்தில் டொனால்ட் டிரம்ப், மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வர்த்தக ஒப்பந்தம் பற்றி பேசியதோடு, பரஸ்பர வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பதாக அறிவித்தார்.

மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டு அமெரிக்கா அல்லது வெனிசுலாவிடம் இருந்து வாங்கும் என்றும், அமெரிக்காவுடனான வர்த்தகம் 500 பில்லியன் டாலராக உயர்த்த உறுதியளிக்கப்பட்டதாகவும் கூறினார்.

ரூ.27 ஆயிரம் கோடிக்கு..

இதனால் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு மீண்டும் வலுப்பெற வாய்ப்புள்ளது. இப்படியான சூழலில் தான் அமெரிக்காவிடம் இருந்து சுமார் ரூ.27 ஆயிரம் கோடிக்கு நவீனரக விமானங்களை இந்தியா வாங்க முடிவு செய்துள்ளது.

P-8I என கூறப்படும் இந்த விமானம் நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு மற்றும் கடல்சார் கண்காணிப்பில் திறம்பட செயல்படும். இதற்காக ரூ. 3 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.27,000 கோடி) மதிப்பில் ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடல்சார் கண்காணிப்பு மேம்படும்

இந்திய கடற்படை தற்போது தமிழ்நாட்டின் அரக்கோணம் மற்றும் கோவாவில் அமைந்துள்ள விமான தளங்களில் கிழக்கு மற்றும் மேற்கு கடல்சார் பகுதிகளைக் கண்காணிக்க 12 P-8I ரக விமானங்களை பயன்படுத்தி வருகிறது.

தற்போது புதிதாக 6 பி-8ஐ விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் மேற்கொள்ள திட்டமிப்பட்டுள்ளது.

ஸ்பெஷல் என்ன?

இந்த பி -81 ரக கடல்சார் ரோந்து விமானம் போயிங் நிறுவனத்தின் தயாரிப்பாகும். இந்த விமானம் 41,000 அடி உயரம் வரை பறக்க முடியும். இந்த விமானத்தில் anti Ship ஏவுகணைகளை பொருத்த முடியும்.

அதேபோல் Cruise வகை ஏவுகணைகளை பொருத்தி துல்லியமாக தாக்குதல் நடத்த முடியும். AN/APY-10 ரேடார் உள்ளதால் துல்லியமாக படம் பிடிக்க முடியும். அதேபோல் MAD அமைப்பின் மூலமாக நீர்மூழ்கி கப்பல்களை கண்காணிக்கும் திறன் கொண்டது.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட இந்த விமானம் கடல் ரோந்து பணியில் முக்கிய பங்காற்றி வருகிறது. இதனால் மீண்டும் இந்த விமானங்களை இந்தியா, அமெரிக்காவிடம் இருந்து வாங்க உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+