Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தரமான சம்பவம்.. அமெரிக்கா, பிரிட்டன், ஓமன், நியூசிலாந்து.. வர்த்தக டீல் போட்டு தூக்கிய இந்தியா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா வர்த்தகர்களுக்கு மிக முக்கியமான செய்திகள் அடுத்தடுத்து வரவுள்ளது. அமெரிக்கா உடனான வர்த்தக டீல் இறுதியாகியுள்ள நிலையில், அது எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பது தொடர்பாக வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அமெரிக்கா மட்டுமின்றி, இங்கிலாந்து, ஓமன், நியூசிலாந்து எனப் பல நாடுகளுடன் பிஸ்னஸ் செய்வது ஈஸியாக போகிறது.

கடந்தாண்டு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்வோருக்கு அவ்வளவு ஒன்றும் சிறப்பான ஆண்டாக அமையவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 50% வரிகளை விதித்தார். இதனால் உலகின் அதிக மதிப்பு மிக்க சந்தையான அமெரிக்காவில் பிஸ்னஸ் செய்வதில் இந்திய வர்த்தகர்களுக்குப் பெரும் சிரமம் ஏற்பட்டது.

India US Trade Deal to Start in April Soon UK Oman and New Zealand FTA to follow says Piyush Goyal

வர்த்தக டீல்

இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை தொடர்பாக நீண்ட ஆலோசனை நடந்தது. கடந்த நவம்பர் முதலே இரு நாட்டு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், சில காரணங்களால் அது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்தச் சூழலில் தான் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து இம்மாதத் தொடக்கத்தில் அறிவிப்பு வெளியானது.

இருப்பினும், அதன் பிறகு எந்தவொரு தகவலும் இல்லாமல் இருந்தது. எப்போது இது இறுதியாகும், எப்போது இது அமலுக்கு வரும்.. ஒப்பந்தம் குறித்த இதர தகவல்கள் என்ன எனப் பல கேள்விகள் நம் முன்பு இருந்தது. இதற்கிடையே இப்போது இது தொடர்பாக வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

அடுத்தடுத்து இன்பச் செய்தி

இந்தியா- அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் இந்த ஆண்டு ஏப்ரலில் நடைமுறைக்கு வரும் என்று அவர் தெரிவித்தார். அமெரிக்கா மட்டுமின்றி, இங்கிலாந்து, ஓமன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களும் அதே மாதத்தில் செயல்படத் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல நியூசிலாந்துடனான ஒப்பந்தம் செப்டம்பரில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கும் மூன்று நாள் கூட்டம், அமெரிக்காவில் வரும் பிப்ரவரி 23ம் தேதி தொடங்குகிறது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் மார்ச் மாதமே இடைக்கால ஒப்பந்தம் முழுமையாக இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாகும் எனக் கூறப்படுகிறது.

கூட்டறிக்கை

இந்த மாதத் தொடக்கத்தில், இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பு இறுதி செய்யப்பட்டதாக இரு நாடுகளும் கூட்டறிக்கை வெளியிட்டன. அதைத் தொடர்ந்தே இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை திங்கள்கிழமை 23ம் தேதி தொடங்குகிறது. அதில் இரு நாடுகளுக்கும் இடையேயான டீல் சட்டப்பூர்வ ஆவணமாகும். இந்தியப் பேச்சுவார்த்தைக் குழுவிற்கு வர்த்தக அமைச்சக இணைச் செயலாளர் தர்பன் ஜெயின் தலைமை தாங்குவார்.

இந்திய வர்த்தகர்களுக்கு நல்ல செய்தி

இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளும் பல பொருட்களுக்குப் பரஸ்பர இறக்குமதி வரிச் சலுகைகளை வழங்கும். இந்தியப் பொருட்களுக்கான வரிகளை 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைப்பதாக அமெரிக்கா அறிவித்தது. ரஷ்யக் கச்சா எண்ணெய் கொள்முதலுக்காக இந்தியா மீது விதிக்கப்பட்ட 25 சதவீத அபராத வரிகளையும் அமெரிக்கா ஏற்கனவே முழுமையாக நீக்கிவிட்டது. அதாவது கடந்தாண்டு ஆகஸ்ட் முதல் இந்திய ஏற்றுமதிக்கு 50% வரிகளை அமெரிக்கா விதித்தது. இப்போது டீல் இறுதியானதால் 50% வரி 18%ஆக குறைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+