"விவசாய துறைக்கு பாதிப்பில்லை".. அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் பற்றி லோக்சபாவில் பியூஷ் கோயல் விளக்கம்
டெல்லி: ‛‛மக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 2ம் தேதி பிரதமர் மோடி - டிரம்ப் இடையே தொலைபேசி உரையாடல் நடந்தது. இந்தியா மீதான வரியை 18 சதவீதம் ஆக குறைக்க டிரம்ப் ஒப்புக்கொண்டார். விவசாயம் போன்ற முக்கிய துறைகளின் பாதுகாப்பு உறுதி செய்வதில் வெற்றி பெற்று இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா உடனான ஒப்பந்தம் வேளாண் துறையில் புதிய தொழில்களை உருவாக்க வழிவகுக்கும்'' என்று மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் மத்திய அரசு விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த அமளி காரணமாக காலை 11 மணிக்கு தொடங்கிய அவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு மீண்டும் 12 மணிக்கு அவை தொடங்கியது.
எதிர்க்கட்சியினர் அமளி
அப்போதும் எதிர்க்கட்சிகள் இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் பற்றி விவாதிக்க கோரினர். இதையடுத்து மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளிப்பதாக கூறினார். அதனை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. விவாதிக்க வேண்டும் என்று கோஷமிட்டு அமளி செய்தனர்.
18% ஆக குறைக்க டிரம்ப் ஒப்புதல்
இந்த அமளிக்கு நடுவே மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் பற்றி விளக்கமளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ‛‛ கடந்த ஓராண்டாக அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
வரி விதிப்பு பதற்றங்களுக்கு நடுவே பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகி உள்ளது. பிப்ரவரி 2ம் தேதி பிரதமர் மோடி - டிரம்ப் இடையே தொலைபேசி உரையாடல் நடந்தது. இந்தியா மீதான வரியை 18 சதவீதம் ஆக குறைக்க டிரம்ப் ஒப்புக்கொண்டார்.
விவசாய துறைக்கு பாதிப்பில்லை
மக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க ஒப்பந்தம் வேளாண் துறையில் ஏற்பட்டுள்ள புதிய தொழில்களை உருவாக்க வழிவகுக்கும்.
அதேவேளையில் விவசாயம் போன்ற முக்கிய துறைகளின் பாதுகாப்பு உறுதி செய்வதில் வெற்றி பெற்று இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இந்திய பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும்'' என்று கூறினார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications