Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி, டிரம்ப் உருவ பொம்மைகளை எரிக்கும் விவசாயிகள்! நாடு தழுவிய போராட்டம்.. விவசாய சங்கம் அழைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் போராட்டத்தை நடத்துகின்றன. இந்த போராட்டத்தில், கிராமங்கள்தோறும் பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் உருவ பொம்மைகளை எரிக்க வேண்டும் என்று விவசாய சங்கங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றன.

இந்தியா-அமெரிக்கா இருதரப்பு ஒப்பந்தத்தை எதிர்த்து பாரதிய கிசான் சங்கம் (பி.கே.யூ.) நாடு தழுவிய போராட்டங்களை அறிவித்துள்ளது. இப்போராட்டங்களின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் உருவ பொம்மைகளை அனைத்து கிராமங்களிலும் எரிக்க பி.கே.யூ. முடிவு செய்துள்ளது.

India US Trade

பிப்ரவரி 10, 2026 அன்று டெல்லியில் பி.கே.யூ. தலைவர் ராகேஷ் டிக்கைட், மத்திய அரசு விவசாயிகள் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தங்கள் விவசாயிகளுக்குப் பெரும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தார். சமீபத்திய விதை, மின்சார (திருத்த) மசோதா போன்ற அறிவிப்புகள் விவசாயிகளை குறி வைத்திருக்கிறது என்றார்.

பிப்ரவரி 12 அன்று மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்த பொது வேலைநிறுத்தத்திற்கு விவசாயிகள் ஆதரவு அளிப்பார்கள் என்றும் டிக்கைட் தெரிவித்தார். இந்த வர்த்தக ஒப்பந்தங்களின் உண்மையான விவரங்கள் ரகசியத் திரைக்குப் பின்னால் மறைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

இந்தியா இந்த ஒப்பந்தங்களிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும் அல்லது விவசாயம் தொடர்பான அனைத்து விதிகளையும் நீக்க வேண்டும் என டிக்கைட் வலியுறுத்தினார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, "ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் தங்கள் விவசாயிகளுக்குப் பெருமளவிலான மானியங்களை வழங்கி, உபரிப் பொருட்களை இந்தியா போன்ற நாடுகளில் கொட்ட முயற்சிக்கிறது. இந்திய அரசு விவசாய அமைப்புகளுடன் கலந்தாலோசிக்காமல், விவசாயத்தின் மீதான தாக்கத்தை மதிப்பிடாமல் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. ஆவணங்களை வெளியிடாதது, போராட்டங்களைத் தடுக்க அரசு விவரங்களை மறைக்க விரும்புவதைக் காட்டுகிறது.

கால்நடை தீவனமான ட்ரைட் டிஸ்டில்லர்ஸ் கிரெய்ன்ஸ் வித் சொலுபில்ஸ் (டி.டி.ஜி.எஸ்) இறக்குமதி, மக்காச்சோளம், சோளம், சோயாபீன் போன்ற உள்நாட்டுப் பயிர்களின் விலையை கடுமையாகக் குறைக்கும். அமெரிக்காவில் இருந்து சோயாபீன் எண்ணெய் இறக்குமதியால், ₹5,328 குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் குறைவாகவே உள்ள சோயாபீன், பண்ணை விலைகளில் பேரழிவு தரும் தாக்கம் ஏற்படும். மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, ராஜஸ்தான் மாநில சோயாபீன் விவசாயிகள் ஏற்கனவே கடுமையான விலை நெருக்கடியால் பாதிப்படைந்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.

எனவே நாளை நாடு தழுவிய போராட்டங்களில் விவசாய மற்றும் தொழிற் சங்கங்களுடன் பொதுமக்களும் திரளாக பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+