இந்தா பிடிங்க ரூ. 3743 கோடி.. மாலத்தீவு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு.. இந்தியா தாராள உதவி!
டெல்லி: மாலத்தீவில் இந்தியா ரூ. 3743 கோடியில் கிரேட்டர் மாலே இணைப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. மாலத்தீவில் இந்தியா கொண்டு வரும் மிகப்பெரிய திட்டம் இது என்று கருதப்படுகிறது. மாலத்தீவு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் இந்த திட்டத்துக்கு இந்தியா நிதியுதவி அளித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில் பதிவு செய்து தகவலில், ''இந்தியாவுக்கும், மாலத்தீவுக்கும் நல்ல உறவு இருந்து வருகிறது. இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகம், பொருளாதாரம் உயர்த்தும் வகையில் சரக்கு போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும். மாலத்தீவில் வேலை வாய்ப்பு, சுற்றுலா, மருத்துவ உதவிகள் பெறும் வகையில் புதிய இணைப்பு திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. இதுகுறித்து மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷஹித்துடன் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது.

மாலத்தீவில் மேற்கொள்ளப்படும் திட்டத்தில் 6.7 கி. மீட்டர் தொலைவுக்கு பாலம் மற்றும் சாலைகள் அமைக்கப்படும். வில்லின்கிலி, கலிபஹு, திலபுஷி ஆகிய குட்டித் தீவுகள் மால்த்தீவுடன் இணைக்கப்படும். இதன் மூலம் மாலத்தீவின் பொருளாதாரம் மேம்படும். சாலை மற்றும் பாலம் அமைக்கும் திட்டத்துக்கு இந்தியா ரூ. 3743 கோடி கொடுக்கும். இதில் ரூ. 748 கோடி உதவித்தொகையாக அளிக்கப்படும். மீதமுள்ள நிதி கடனாக அளிக்கப்படும்.

கொரோனா காலத்திலும் மாலத்தீவுக்கும், இந்தியாவுக்கும் இடையே போக்குவரத்து நடந்து வருகிறது. மாலத்தீவின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் இந்த போக்குவரத்து நீடிக்கப்பட்டு வருகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

மாலத்தீவின் அதிபராக கடந்த 2018ல் இப்ராஹீம் மொஹம்மது சொலி பதவியேற்றதில் இருந்து இன்று வரை அந்த நாட்டுக்கு இந்தியா மொத்தம் 2 பில்லியன் டாலர் வரை நிதியுதவி அளித்துள்ளது.
Recommended Video
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications