8 அதிநவீன அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் சேர்ப்பு.. குங்குமம், தேங்காய் உடைத்து பூஜை
Recommended Video
டெல்லி: இந்திய விமானப் படையில் 8 அதிநவீன அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இன்று சேர்க்கப்பட்டுள்ளன. அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்ட அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், மலை, காடு போன்ற கடுமையான பகுதிகளிலும் எதிரிகளை தாக்க பயன்படும்.
பதன்கோட் விமானப்படை தளத்தில் இன்று காலை நடைபெற்ற ஹெலிகாப்டர்கள் சேர்ப்பு விழாவில், விமானப்படை தளபதி, பி.எஸ்.தனோவா முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். வாட்டர் சல்யூட் அடித்து, இந்த ஹெலிகாப்டர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேற்கு பிராந்திய விமானப்படை தளபதி ஆர்.நம்பியார் பதான்கோட் விமான நிலையத்தில் வைத்து ஹெலிகாப்டர்களுக்கு 'பூஜை' நடத்தினார். ஹெலிகாப்டர்களுக்கு குங்குமம் வைக்கப்பட்டு, தேங்காய் உடைத்து, இந்த பூஜைகள் நடத்தப்பட்டன.
அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்களை இயக்கும் உலகின் 14 வது நாடு இந்தியாவாகும். இந்திய விமானப்படை, செய்தித் தொடர்பாளர் அனுபம் பானர்ஜி கூறுகையில், தற்போது விமானப்படையிடம் 8 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் உள்ளன. படிப்படியாக 22 ஹெலிகாப்டர்கள் சேர்க்கப்பட உள்ளன.
நம்மிடம் இதற்கு முன்பும் பல போர் ஹெலிகாப்டர்கள் உள்ளன. ஆனால், இது மிக துல்லியமாக தாக்கக்கூடிய ஹெலிகாப்டராகும்.
AH-64E அப்பாச்சி உலகின் மிக முன்னேறிய மல்டி-ரோல் போர் ஹெலிகாப்டர்களில் ஒன்றாகும், இது அமெரிக்க ராணுவத்தாலும் பயன்படுத்தப்படுகிறது.
Punjab: Air Chief Marshal BS Dhanoa and Western Air Commander Air Marshal R Nambiar near the Apache choppers for 'Pooja' ceremony before induction at the Pathankot Air Base. India is the 16th nation in the world to be operating the Apache attack helicopters. pic.twitter.com/I3BmEibO66
— ANI (@ANI) September 3, 2019
விமானப்படை தளபதி தனோவா கூறுகையில் "அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் நமது தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளன. சரியான நேரத்தில் ஹெலிகாப்டர்களை வழங்கியுள்ளார்கள். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.
Punjab: The Apache choppers receive water cannon salute, before induction at the Pathankot Air Base. pic.twitter.com/e9YDrhqTv2
— ANI (@ANI) September 3, 2019
22 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்குவதற்காக, இந்திய விமானப்படை 2015, செப்டம்பரில் அமெரிக்க அரசு மற்றும் போயிங் லிமிடெட் நிறுவனத்துடன் பல பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 22 ஹெலிகாப்டர்களில் முதல் நான்கு விமானங்களை போயிங் கடந்த ஜூலை 27ம் தேதி ஒப்படைத்தது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications