மியான்மரில் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட இந்தியர் மரணம்!
டெல்லி: மியான்மரில் கிளர்ச்சியாளர்களால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய கட்டுமான ஆலோசகர், மரணமடைந்தார்.
மியான்மரின் ராகைன் மாநிலத்தின் வடக்கு பகுதியில் இந்தியத் திட்டப் பணியில் கட்டுமான ஆலோசகராக பணியாற்றியவர்,வினு கோபால் (60). இவரையும், அங்கே பணிபுரியும் மேலும் நான்கு இந்தியர்களையும், கடந்த ஞாயிற்றுக்கிழமை, அங்குள்ள 'அராகன்' என்ற கிளர்ச்சியாளர் குழுவால் சிறை பிடிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், வினு கோபால் மரணமடைந்துவிட்டதாக கிளர்ச்சி குழு திடீரென அறிவித்தது. இதையடுத்து, நேற்று, மற்ற 4 பேரை விடுதலை செய்தது அந்த குழு. இறந்தவரின் உடலும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
ஆசியான் மற்றும் கிழக்கு ஆசியா உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி பாங்காக்கில் மியான்மரின் ஆளும் கட்சி தலைவர் ஆங் சான் சூகி -யை சந்தித்த அதே நாளில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்தியா-மியான்மர் எல்லையில் செயல்பட கிளர்ச்சிக் குழுக்களை அனுமதிக்க மாட்டோம் என மோடி அந்த சந்திப்பில் உறுதியளித்திருந்தார்.
அராகன் அமைப்பின் அறிக்கையில், சுவாச பிரச்சினையால் வினு கோபால் இறந்தார். எங்களின் மருத்துவ ஊழியர்களால் வழங்கப்பட்ட "சிறந்த மருத்துவ பராமரிப்பு" வசதி இருந்தபோதிலும் குறுகிய நேரத்தில் அவர் இறந்துவிட்டார்.
அவர் இதய நோய் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு மருந்துகள் எடுத்து வந்தவர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மரணத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட மற்ற நால்வரும், விஜய் குமார் சிங் (48), நங்ஷான்போக் சுயம் (47), ராகேஷ் சர்மா (64), அஜய் கோத்தியால் (50) என தெரியவந்துள்ளது.
அராகன் கிளர்ச்சிப் படை தங்கள் பகுதி வழியாகச் செல்லும் போக்குவரத்து வாகனங்களை அடிக்கடி சோதித்து பார்க்கிறது. அந்த வாகனங்களில் மியான்மர் ராணுவ உறுப்பினர்கள், ஆயுதங்கள் மற்றும் மியான்மர் ராணுவம் தொடர்பான நபர்கள் இருக்கிறார்களா என்பதை அறிய இந்த சோதனை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications