பொருளாதாரம் ஐசியூவில் இருக்கு.. படுகொலை செய்யப்பட்ட ஜனநாயகம்.. ராகுல் காந்தி
டெல்லி: தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வரும் இந்திய பொருளாதாரம் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலை, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, விவசாயிகளின் துயரம், வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக "தேசத்தை காப்போம்" என்ற தலைப்பினாலான பேரணிக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இந்த பேரணிக்கு செல்வதற்கு முன்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி கூறுகையில் தேசத்தை காப்போம் என்ற பேரணி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த ட்வீட் போடப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரம் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது.
आज दिल्ली के ऐतिहासिक रामलीला मैदान में कांग्रेस पार्टी की ओर से आयोजित भाजपा सरकार की तानाशाही, I.C.U में पहुँचा दी गई अर्थव्यवस्था और लोकतंत्र की हत्या के विरोध मे जनसभा को संबोधित करूँगा।
— Rahul Gandhi (@RahulGandhi) December 14, 2019
Live: https://t.co/yxwa8xCWqt#BharatBachaoRally pic.twitter.com/DrOBr4ckYu
குடியுரிமை மசோதா நிறைவேற்றம் மூலம் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுவிட்டது என தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் புதிய குடியுரிமை சட்டத்திருத்தத்தை தவறாக பரப்பி வருவதாக காங்கிரஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.