Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீரென மாயமான ரயில் பெட்டி.. குழம்பி போன பயணிகள்.. பரிதவித்த டிக்கெட் பரிசோதகர்.. என்ன நடந்தது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பொதுவாகவே நம்மில் பலருக்கும் மேஜிக் பிடிக்கும். மேஜிக் வித்தையில் நமது கண் முன்னாடியே இருக்கும் ஒரு பொருளை மறைய வைத்து மேஜிக் செய்வார்கள். ஆனால், ஒட்டுமொத்த ரயில் பெட்டியும் மாயமாகிப் போய் நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? அப்படியொரு வினோதமான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. ஆனால், இது மேஜிக் இல்லை. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

இந்தியாவில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்து முறையாக ரயில்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் பல கோடி பேர் ரயில்களைப் பயன்படுத்துகிறார்கள். அதேநேரம் ரயில் பயணங்களில் எப்போதும் பல வினோதச் சம்பவங்கள் நடக்கும். அப்படியொரு வினோதமான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. எந்தவொரு மேஜிக்கும் இல்லாமல் ஒடிசாவின் மேற்குப் பகுதியில் ரயில் பெட்டி ஒன்று அப்படியே மாயமாகியுள்ளது.

Train India offbeat

ரயில்

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்கத்தின் பர்த்வான் நகரில், பி.சி. சர்க்கார் ஜூனியர் என்ற மந்திரவாதி, ஒரு பயணிகள் ரயிலையே அப்படியே மொத்தமாக மாயமாக்கிக் காட்டினார். இதைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் மிரண்டு போனார்கள். அதை விடப் பயணிகள் கலங்கடித்த சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. ஆனால், இது மேஜிக் எல்லாம் இல்லை.

மாயம்

அங்கு ரயில் பயணிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஒட்டுமொத்தப் பெட்டியும் காணாமல் போயிருந்தது. சம்பல்பூர்- நாந்தெட் நாகாவலி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (20809) ஞாயிற்றுக்கிழமை காலை சம்பல்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தபோது சில பயணிகளுக்கு ரொம்ப ஷாக். ஏசி வகுப்பில் முதலாம் நம்பர் பெட்டி இருக்கிறது. அதைத் தாண்டிப் போனால் 3ம் நம்பர் பெட்டி இருந்துள்ளது. ஆனால், 2ம் நம்பர் பெட்டி (BE2) மட்டும் காணவில்லை.

இதனால் சம்பந்தப்பட்ட பெட்டிக்கு டிக்கெட் வைத்திருந்தோர் எங்கு ஏறுவது எனத் தெரியாமல் குழம்பியுள்ளனர். அங்கும் இங்கும் பணிகள் அலைமோதினர். முதலில் பயணிகள் யாரைக் கேட்பது எனப் புரியாமல் குழம்பி இருந்தனர். பிறகு, உள்ளே ஏறிய பிறகு பேசிக் கொள்ளலாம் என அவர்கள் ரயில் ஏதோ ஒரு பெட்டியில் ஏறினர். அதன் பிறகு டிடிஆரிடம் இது குறித்துக் கேட்டு பிரச்சினை செய்யவே, அவரும் இது எப்படிச் சாத்தியம் எனக் குழம்பிப் போனார்.

சிக்கல் என்ன

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரிலிருந்து 320 கி.மீ. மேற்கே உள்ள சம்பல்பூரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. எந்தவொரு மேஜிக்கும் இல்லாமல் ரயில்வே துறையில் நடந்த குளறுபடியால் ஒட்டுமொத்த ஏசி பெட்டியும் மாயமாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் ரயில் அந்த குறிப்பிட்ட பெட்டி இல்லாமலேயே மேற்கு வங்கத்தின் சம்பல்பூரில் இருந்து புறப்பட்டது தெரிய வந்தது.

புலம்பல்

இந்தக் குழப்பத்தால் சில பயணிகள் ரயிலில் ஏறாமலேயே விட்டுவிட்டனர். வேறு சிலர் கிடைத்த பெட்டியில் ஏறிக்கொண்டனர். கன்பார்ம் டிக்கெட் வைத்திருந்த சுமார் 30+ பயணிகள், ரயிலின் வெவ்வேறு பெட்டிகளில் ஏறிப் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பெட்டியை இணைப்பதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுதான் இதற்குக் காரணம் என்று கிழக்குக் கடற்கரை ரயில்வே விளக்கமளித்தது.

விசாகப்பட்டினம் ஜங்ஷனை ரயில் அடைந்ததும், ஒரு புதிய ஏ.சி. பெட்டி இணைக்கப்பட்டு, இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டது. இருப்பினும், இது குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பேசுபொருள் ஆகியுள்ளது. இந்தச் சிக்கல் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+