Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விரைவில் வரும் புல்லட் ரயில்! முதற்கட்ட பணி முடிவது எப்போது? அஸ்வினி வைஷ்ணவ் தந்த மேஜர் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தின் முதற்கட்ட பணிகள் குஜராத் பிலிமோரா மற்றும் சூரத் இடையே 50 கிலோமீட்டர் தூர பணிகள் எப்போது முடிவடையும்? என்பது பற்றி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ரயில்வே துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக புல்லட் ரயில் திட்டத்தை இந்தியா வகுத்து அதற்கான பணியை தொடங்கி உள்ளது. இந்த புல்லட் ரயில் சேவை என்பது மகாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கும் குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையே இயங்க உள்ளது.

Indias first bullet train section between Bilimora and Surat in Gujarat will be completed in August 2026

இந்த திட்டம் ரூ.1.08 லட்சம் கோடி திட்டத்தில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதில் ரூ.10 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கும் நிலையில் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகள் தலா ரூ.5 ஆயிரம் கோடியை வழங்க உள்ளன. மீதமுள்ள நிதியானது ஜப்பான் நாட்டில் இருந்து கடனாக பெறப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

கமதாபாத்-மும்பை இடையே 350 கிலோமீட்டர் வேகத்தில் இந்த புல்லட் ரயில் இயங்கும். இதன்மூலம் 508 கிலோமீட்டர் தொலைவை வெறும் 2 மணிநேரம் 50 நிமிடங்களில் கடக்க முடியும். தற்போது 8 மணிநேரமாக பயண நேரம் இருக்கும் நிலையில் 5 மணிநேரம் குறையும். இந்த புல்லட் ரயில் திட்டத்துக்கு என்று தனியாக ரயில் வழித்தடம் உருவாக்கப்பட்டு வருகிறது. வல்சாத் மாவட்டத்தின் பர் மற்றும் அவுரங்கா மற்றும் நவ்சாரியில் உள்ள பூர்ணா, மின்தோலோ, அம்பிகா, வெங்கனியா உள்ளிட்ட 6 நதிகளின் மேல் பாலங்கள் அமைக்கப்பட்டு புல்லட் ரயில் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த பாலங்களின் ட்ரோன் வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன.

கடந்த 2017 ல் பணிகள் துவங்கினாலும் கூட நிலம் கையகப்படுத்துவதில் பல இடையூறுகள் ஏற்பட்டன. மேலும் கொரனோா பரவலும் பணியை முடக்கியது. இதனால் 2022ல் புல்லட் ரயில் சேவையை தொடங்க எடுத்த முன்முயற்சிகள் தள்ளிப்போயின. இருப்பினும் கடந்த 2021 நவம்பர் மாதம் புல்லட் ரயில் வழித்தட பணிகள் மீண்டும் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தான் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் முதற்கட்ட வழித்தட பணி எப்போது முடிவையும் என்பது பற்றி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார். மேலும் ரயில்வே துறையின் சேவைகள் குறித்த பல்வேறு முக்கிய தகவல்களையும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛இந்தியாவின் முதல் புல்லட் ரயில் பிரிவு என்பது குஜராத்தின் பிலிமோரா மற்றும் சூரத் இடையே 50 கிமீ தூரத்தில் நடந்து வருகிறது. இந்த பணி 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவடையும். தற்போது புல்லட் ரயில் திட்டத்துக்கான பணிகள் விரைவாக நடந்து வருகிறது'' என்றார். சமீபகாலமாக புல்லட் ரயில் குறித்த முக்கிய அப்டேட்டுகள் வெளிவராமல் இருந்த நிலையில் அஸ்வினி வைஷ்ணவ் இந்த புதிய தகவலை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‛‛இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு முன்பு புதிய ரயில்களின் எண்ணிக்கை என்பது மெயில், எக்ஸ்பிரஸ் வகைகளை பொறுத்தமட்டில் 1,786 என இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை என்பது 2,124 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் புறநகர் சேவைகளுக்கான புதிய ரயில்கள் 5,626 என இருந்தது. தற்போது இது 5,774 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பயணிகள் ரயில்களின் எண்ணிக்கை 2,792ல் இருந்து 2,856 ஆக அதிகரித்துள்ளது. அதோடு கடந்த 2022-23ம் ஆண்டில் ரயிலில் 640 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை என்பது 2023-24ம் ஆண்டில் 750 கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+