"ஏகப்பட்ட தவறுகள்.." இண்டிகோவுக்கு ரூ.22 கோடி அபராதம் விதிப்பு.. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
டெல்லி: இண்டிகோ விமான நிறுவனத்திற்கு 22.20 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.. கடந்தாண்டு டிசம்பர் மாதம் இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட செயல்பாட்டுக் குறைபாடுகளுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மூத்த நிர்வாகிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் முக்கியமான விமான நிறுவனங்களில் ஒன்று இண்டிகோ. கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய விமானச் சந்தையில் இண்டிகோ ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எத்தனையோ விமான நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் திணறும் நிலையில், இண்டிகோ மட்டும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. இந்தச் சூழலில் தான் டிசம்பர் மாதம் மிக மோசமான சம்பவம் நடந்தது.

டிசிஜிஏ எனப்படும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்திருந்த புதிய விதிகள் அமலுக்கு வந்தபோது, இண்டிகோ அதற்கேற்பத் திட்டமிடவில்லை. இதன் காரணமாக நாடு முழுக்க பல ஆயிரம் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது பல மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன. டிசம்பர் 3 முதல் 5 வரையிலான நாட்களில் இண்டிகோ 2,507 விமானங்களை ரத்து செய்ததுடன், 1,852 விமானங்களில் தாமதம் ஏற்பட்டன. இதனால் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் செயல்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை குறைபாடுகள் இருப்பதை டிசிஜிஏ அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து இண்டிகோ நிறுவனம் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.22.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மூத்த நிர்வாகிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிசிஜிஏ உத்தரவுகள் தங்களுக்கு வந்துள்ளதை இண்டிகோ நிறுவனம் உறுதி செய்துள்ளது. மேலும், உத்தரவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்றும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், இதுபோன்ற சிக்கல் மீண்டும் வராமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்!












Click it and Unblock the Notifications