ராகுல் காந்தி மட்டுமல்ல.. இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை! தகுதி நீக்கம் செய்யப்பட்ட "டாப் தலைகள்"
டெல்லி: ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் எம்பி பதவியில் இருந்து அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. இந்திரா காந்தி, ஜெயலலிதா, லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டவர்கள் கூட ராகுல் காந்தியை போல் இதற்கு முன் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடியின் பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்தது.
லோக்சபா எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு முன்பாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட முக்கிய தலைவர்கள் யார் என்ற விவரங்களை பார்க்கலாம்.

இந்திரா காந்தி:
கடந்த 1971-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் இந்திரா காந்திக்கு முகவராக செயல்பட்ட யஷ்பால் கபூர் அரசு ஊழியர் ஆவார். எனவே அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி இந்திரா காந்தியிடம் தோல்வியடைந்த ராஜ் நாராயண் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், கடந்த 1975 ஜூன் 12-ம் தேதி இந்திரா காந்தி குற்றவாளி, அவரது தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா:
மேலும் அடுத்த 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தது. அதன்பிறகு நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு அரசியல் அமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழக முதல்வராக பதவி வகித்து வந்த ஜெயலலிதா கடந்த 2014 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால், முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்தார்.

லாலுபிரசாத் யாதவ்:
மாட்டுத்தீவின ஊழல் வழக்கில் சிக்கிய லாலு பிரசாத் யாதவ், கடந்த 2013 ஆம் ஆண்டு மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவருக்கு தேர்தலில் போட்டியிட 11 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. 5 ஆண்டுகள் சிறை தண்டனை அதன் பிறகு 6 ஆண்டுகள் போட்டியிட தடை என மொத்தம் 11 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.

ஆசம் கான்:
சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆசம்கான், கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது பிரதமர் மோடி, ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆசம் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து எம்.எல்.ஏ பொறுப்பில் இருந்து ஆசம் கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

உம்லேஷ் யாதவ்:
தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் அரசியல்வாதி உம்லேஷ் யாதவ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் செலவீனங்களை குறைத்துக் காட்டியதற்காக உம்லேஷ் யாதவை தகுதி நீக்கம் செய்த தேர்தல் ஆணையம் அவர் தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை விதித்தது. உம்லேஷ் யாதவ் உத்தர பிரதேசத்தின் பிசவுலி தொகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

லட்சத்தீவு எம்.பி முகம்மது பைசல்:
கொலை முயற்சி வழக்கில், லட்சத்தீவைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்.பி முகமது பைசலுக்கு லட்சத்தீவு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருந்தார். எனினும், தீர்ப்பை எதிர்த்து முகமது பைசல் மேல்முறையீடு செய்ததை அடுத்து தண்டனையை நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டது. முகமது பைசலின் சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் லட்சத்தீவு இடைத்தேர்தலை ஆணையம் நிறுத்திவைத்துள்ளது.
-
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
Periasamy Kumaran: இங்கிலாந்திற்கான இந்தியாவின் புதிய தூதராக பெரியசாமி குமரன் நியமனம்! யார் தெரியுமா இவர்? -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி











Click it and Unblock the Notifications