பாகிஸ்தான் பஞ்சத்தில் அடிபட போகுது.. உறுதியாக இருக்கும் இந்தியா.. வெளியுறவுத்துறை அதிரடி
டெல்லி: பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது நிறுத்தியது தான். பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை விடும்வரை சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் இடைநிறுத்தம் அமலில் இருக்கும் என மத்திய வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பேரை கொன்றனர். இதற்கு ‛ஆபரேஷன் சிந்தூர்' என்பதன் மூலம் நம் நாடு பதிலடி கொடுத்தது. 9 பயங்கரவாத முகாம்கள், முக்கிய விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டது.

நம்மை தாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. அதன்பிறகு பாகிஸ்தான் நம்மிடம் பணிந்து சண்டை நிறுத்தம் செய்ய கோரிய பிறகு மோதல் முடிவுக்கு வந்தது.
முன்னதாக, பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து நம் நாடு பாகிஸ்தானுக்கானுக்கான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. கடந்த 1960ம் ஆண்டு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்டன. உலக வங்கியின் மத்தியஸ்தத்தில் நடந்த இந்த ஒப்பந்தத்தின்படி, சிந்து ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளின் நீரை இருநாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவுக்கு கிழக்கு பகுதி ஆறுகள் (ரவி, பியாஸ், சட்லெஜ் - 30% நீர்), பாகிஸ்தானுக்கு மேற்கு பகுதி ஆறுகள் (சிந்து, ஜீலம், செனாப் - 70% நீர்) ஒதுக்கப்பட்டன.
ஆனால் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக நம் நாடு அறிவித்தது. இது பாகிஸ்தானுக்கு பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது. அதாவது ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதன் மூலம் அதில் உள்ளது போல் பாகிஸ்தானுக்கு நம் நாடு தண்ணீர் என்பது வழங்க வேண்டி இருக்காது. ஆனால் பாகிஸ்தானை எடுத்து கொண்டால் சிந்து நதிநீர் என்பது மிகவும் முக்கியமானதாகும். நாட்டின் 22 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த சிந்து நதிநீரை நம்பித்தான் உள்ளனர். விவசாயம், குடிநீருக்கு இதனை தான் பயன்படுத்தி வருகின்றன. தற்போது சிந்து நதிநீர் நிறுத்தப்பட்டுள்ளதால் பாகிஸ்தான் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தான் மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் இன்று டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ‛‛பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சிந்து நதி நீர் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக கூறியிருக்கிறாரே'' என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ரன்தீர் ஜெய்ஸ்வால், ‛‛சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை பொறுத்தவரை பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடன் செயல்பட வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கைவிட வேண்டும். அதனை கைவிடும்வரை சிந்து நதிநீர் இடைநிறுத்தம் அமலில் இருக்கும். பாகிஸ்தானிடம் வழங்கப்பட்ட பட்டியலில் உள்ள பயங்கரவாதிகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த பயங்கரவாதிகளை ஒப்படைப்பது மற்றும் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் குறித்த பேச்சுவார்த்தைகள் பற்றி நடைபெறும். பிரதமர் மோடி ஏற்கனவே பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாகச் செல்ல முடியாது, பயங்கரவாதமும் வர்த்தகமும் ஒன்றாக மேற்கொள்ள முடியாது. தண்ணீரும், ரத்தமும் ஒன்றாக இருக்காது என்று கூறியிருந்தார்.
இதன்மூலம் பாகிஸ்தான் பஞ்சத்தில் அடிபடப்போவது உறுதியாகி உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் பாகிஸ்தான் மக்கள்தொகை என்பது 25 கோடி என்று இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதில் சிந்து நதிீநீர் ஒப்பந்தத்தை நிறுத்தும்போது 22 கோடி பேர் பாதிக்கப்பட உள்ளனர். கிட்டத்தட்ட மொத்த நாட்டு மக்களும் பாதிக்கப்பட உள்ளனர். ஏனென்றால் பாகிஸ்தானை எடுத்து கொண்டால் சிந்து நதிநீர் என்பது மிகவும் முக்கியமானது. அந்த நாட்டு மக்களின் உயிர்நாடியாக இதுதான் இருந்து வருகிறது.
பாகிஸ்தானில் 16 மில்லியன்(ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) ஹேக்டர் பரப்பு விவசாயம் ( நாட்டின் 80 சதவீத விவசாயம்) இந்த சிந்து நதிநீரை நம்பித்தான் நடக்கிறது. இந்த தண்ணீரில் 93 சதவீதம் பாசனத்துக்காக பயன்படுத்தப்படகிறது. லாகூர், முல்தான், கராச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு ஓடும் ஆறுகளுக்கு சிந்து நதிநீரில் இருந்து தான் தண்ணீர் செல்கிறது. இதனால் அந்த நகரங்களும் பாதிக்கபப்ட உள்ளது. அதேபோல் தர்பேலா, மங்களா நீர்மின் உற்பத்தி நிலையங்களும் பாதிக்கப்பட உள்ளது.
-
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications