பிப்ரவரி 1ம் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல்.. சலுகை மழை வெளியாகுமா?
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம், 31ம் தேதி துவங்க உள்ளது. பிப்ரவரி 1ம் தேதி, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
மோடி அரசு தனது 5வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், இந்த ஆட்சிகாலத்தின் நிறைவு பட்ஜெட் இதுவாகும். எனவே கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இதில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு பதிலடியாக, வருமான வரி வரம்பை உயர்த்தும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.
பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனவரி 31ம் தேதி துவங்கி, பிப்ரவரி 13ம் தேதிவரை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications