இந்தியாவில் இருந்து சர்வதேச விமான சேவைகள் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து!
டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக சர்வதேச பயணிகள் விமானங்களின் சேவை ரத்து நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று இந்திய விமான ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் மார்ச் 23 முதல் சர்வதேச பயணிகள் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் சிறப்பு சர்வதேச விமானங்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மே முதல் மற்றும் ஜூலை முதல் குறிப்பிட்ட நாடுகளுடன் இருதரப்பு 'வான்வழி சேவை'கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கென்யா, பூட்டான் மற்றும் பிரான்ஸ் உட்பட சுமார் 18 நாடுகளுடன் இந்தியா வான்வழி சேவைக்கு ஒப்பந்தங்களை உருவாக்கியுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான ஒரு விமான போக்குவரத்து ஒப்பந்தத்தின் கீழ், சிறப்பு சர்வதேச விமானங்களை அந்தந்த நாடுகளிளில் உள்ள முக்கிய நகரங்களுக்கு விமான நிறுவனங்கள் இயக்க முடியும்.
இந்நிலையில் இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானங்களின் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு அதாவது நவம்பர் 30 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட சில நாடுகளை தவிர மற்ற நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்படாது. அரசு அனுமதித்த வழித்தடங்களில் விமான சேவைகள் இயக்கப்பட உள்ளதாக இந்திய விமான ஒழுங்குமுறை ஆணையம் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் தனது சுற்றறிக்கையில் சர்வதேச அளவில் அனைத்து சரக்கு விமான சேவைகள் மற்றும் சரக்கு சேவைக்காக அங்கீகரிக்கப்பட்ட விமானங்களின் செயல்பாடு பாதிக்கப்படாது என்றும் வழக்கம் போல் சரக்கு விமானங்கள் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட போதிலும், உள்நாட்டு விமான சேவைகள் கடந்த மே 25ம் தேதி முதல் தொடர்ந்து நாடு முழுவதும் இயக்கப்படுகிறது.
-
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி











Click it and Unblock the Notifications