பைலட் கிரிக்கெட் பார்த்தது தான் ரயில் விபத்துக்கு காரணமா? அஸ்வினி வைஷ்ணவ் கூறியது பொய்யா? பரபர தகவல்
டெல்லி: கடந்த ஆண்டு ஆந்திராவில் ஏற்பட்ட பலாசா ரயில் விபத்திற்கு, ரயிலை இயக்கிய லோகோ பைலட்தான் காரணம் என்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருந்தார். இந்நிலையில், ரயில்வே துறை மேற்கொண்ட விசாரணையில் அமைச்சர் கூறியது உண்மையில்லை என்று தெரிய வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீப நாட்களாக ரயில் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது. இதனையடுத்து ஆந்திராவில் நடைபெற்ற விபத்து 17 உயிர்களை பலி வாங்கியது. ஆந்திராவின் விஜயநகர மாவட்டம் கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் அக்.29ம் தேதியன்று விசாகப்பட்டினத்திலிருந்து ராயகடா நோக்கிச் சென்ற பாசஞ்சர் ரயில் நின்று கொண்டிருந்தது.

ரயில் பாதையின் மேல் உள்ள கேபிள் பிரச்சினை காரணமாக அந்த ரயில் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த வழியாக வந்த பலாசா எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த பாசஞ்சர் ரயில் மீது பயங்கரமாக மோதியது. இந்த கொடூர விபத்தில் 3 பாசஞ்சர் ரயில் பெட்டிகள் தாறுமாறாக தூக்கி எறியப்பட்டன. இதில் சம்பவ இடத்திலேயே 13 பேர் உயிரிழந்தனர். இதில் பலாசா எக்ஸ்பிரஸை இயக்கிய லோகோ பைலட்டுகள் இருவரும் உயிரிழந்தனர்.
ஒடிசா விபத்துக்கு பின்னர் அடுத்தடுத்து நடந்த விபத்துகள் மத்திய ரயில்வே துறை மீது பெரும் அதிருப்தியை உருவாக்கியது. குறிப்பாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மீது தொடர் விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இப்படி இருக்கையில், ஆந்திராவில் நடந்த விபத்து ரயில்வே அமைச்சகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. விபத்து குறித்து அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருந்த கருத்து விவாதங்களை ஏற்படுத்தியது.
அதாவது, "பலாசா எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கிய லோகோ பைலட்டுகள் இருவரும் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்ததால், இரண்டு சிக்னல்கள் பழுதாகி இருந்ததை கவனிக்காமல் வேகமாக ரயிலை இயக்கியுள்ளனர். அதனால்தான் கட்டுப்பாட்டை மீறி ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து கிழக்கு கடற்கரை ரயில்வே விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் விசாரணையில் பலாசா எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கிய லோகோ பைலட்டுகள் கிரிக்கெட் பார்த்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்று தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது லோகோ பைலட்டுகளின் மொபைல் டேட்டா பயன்பாடுகளை ஆராய்ந்தபோது இந்த விஷயம் வெளி வந்திருக்கிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications