5 மாதமாக போராடுகிறோம். டெல்லி எல்லைகளே எங்கள் வீடுகள்... விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத்
டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக 5 மாதங்களாக தாங்கள் போராட்டம் நடத்தும் டெல்லி எல்லைகள்தான் எங்கள் வீடுகள்; எங்களால் கொரோனா பரவவில்லை என விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலை அதிவேகமாக தாக்கி வருகிறது. அனைத்து மாநிலங்களும் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லியிலும் வார இறுதி நாட்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளன.

டெல்லி போராட்டம்
இதனிடையே டெல்லியில் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டுவிட்டு வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என அரசு தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆக்சிஜன் வாகனங்களை விவசாயிகள் மறித்து வருவதாகவும் குற்றம்ச்சாட்டப்பட்டது.

எல்லைகளே வீடுகள்
ஆனால் இதனை திட்டவட்டமாக விவசாய சங்கத்தினர் மறுத்துள்ளனர். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத், 5 மாதங்களாக எங்களது போராட்டம் இங்கேதான் நடந்து கொண்டிருக்கிறது. இந்த டெல்லி எல்லைகள்தான் எங்களது வீடுகள். இங்கேதான் தொடர்ந்து போராடுவோம்.

எங்களால் கொரோனா பரவியதா?
எங்களால் கொரோனா பரவவில்லை. எங்களால் கொரோனா பரவியது என யாராவது கூற முடியுமா? நாங்கள் பெரும்பாலும் முதல் கட்ட கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோம். ஆனால் 2-வது கட்ட கொரோனா தடுப்பூசி எங்களுக்கு கிடைக்கவில்லை. இதற்கான ஏற்பாடுகளை அரசுகள் செய்ய வேண்டும்.

தொடரும் போராட்டம்
இப்தார் விருந்து தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். நாங்கள் குறைந்த எண்ணிக்கையில் சமூக இடைவெளியுடனேயே அந்த நிகழ்ச்சியை நடத்தினோம். ஒருவருக்கு ஒருவர் கை கூட குலுக்கிக் கொள்ளவே இல்லை. எங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றார்.
-
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ












Click it and Unblock the Notifications